tamilnadu

பேரறிவாளனுக்கு சிகிச்சை

தருமபுரி,டிச.28- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை  பெற்ற பேரறிவாளனுக்கு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மே மாதம் 28 ஆம் தேதி பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து, திருப்பத்தூர்  மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளுடன் தங்கியுள்ளார். நீதிமன்ற உத்தரவுபடி ஜோலார் பேட்டை காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட்டு வருகிறார். சீறுநீரக தொற்றால் பாதிக்கப்பட் டுள்ள பேரறிவாளன் வீட்டில் இருந்தபடி மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். மேலும், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைக்கு சென்று அவ்வப்போது உடல் பரிசோதனையும் செய்து வருகிறார். இந்நிலையில், சிறுநீரக தொற்றால் அவதியுற்று வந்த பேரறிவாளன் தருமபுரியில் உள்ள தனியார் மருத் துவமனைக்கு பலத்த காவல் துறை யினரின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார். உடல் நலக்குறைவு காரணமாக பரோலில்  வந்துள்ள பேரறிவாளனுக்கு 8-வது முறையாக பரோலை தமிழக அரசு  நீட்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.