போக்குவரத்து தொழிலாளர்கள் கைது ! தமிழ்நாடு அரசு உடனடியாக தலையீடு செய்ய வேண்டும்!
சென்னை, அக். 9 - போக்குவரத்துத் தொழிலாளர்கள் 50 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் நிலையில், அவர்களின் பிரச்ச னையில் தமிழக அரசு தலையிட்டு சுமூகத் தீர்வுகாண வேண்டும் என்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது: ஆக. 18 முதல் நடைபெறும் காத்திருப்புப் போராட்டம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழி யர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்ட த்தை அமல்படுத்த வேண்டும், 17 மாத ங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதி யப் பணப்பலன்களை வழங்க வேண்டும், தொழிலாளர்களின் சம்ப ளத்தில் பிடித்தம் செய்யும் பணம் உரிய கணக்கில் சேர்க்கப்பட வேண்டும், பணிபுரியும் ஊழியர்களுக்கான ஒப்பந்த நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போக்கு வரத்து தொழிலாளர்கள் (சிஐடியு) கடந்த ஆகஸ்ட் 18 முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 22 மையங் களில் நடைபெறும் இக்காத்திருப்பு போராட்டத்தில் தினமும் சுமார் 2000 பேர் அளவிற்கு ஓய்வுபெற்ற மற்றும் பணிபுரியும் தொழிலாளர்கள் பங்கேற்று வருகின்றனர். தொடர் காத்திருப்பு போராட்டம் 53 நாட்களாக நடைபெற்று வருகின்றது. பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் பதிலளிக்கவில்லை கடந்த செப்டம்பர் 1 அன்று போக்கு வரத்துத்துறை அமைச்சர், அழைத்துப் பேசினார். சங்கம் முன்வைத்த கோரிக் கைகளை அமைச்சர் ஏற்றுக்கொண் டார். நிதித்துறையுடன் பேசிவிட்டு பதில் அளிப்பதாக கூறிய அமைச்சர் இது வரை எவ்வித தகவலும் தெரிவிக்க வில்லை. அமைதியான முறையில் பொதுமக்கள் சேவையும் பாதிக்கப் படாமல் கடந்த 53 நாட்களாக நடை பெறும் தொடர் போராட்டத்தின் கோரிக் கைகளைப் பேசி, போராட்டத்தை முடி வுக்கு கொண்டுவர அரசு இதுவரை எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. தொழிலாளர்களின் பணம் ரூ. 15 ஆயிரம் கோடியை கழக நிர்வாகங்கள் செலவு செய்துவிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் இப்பிரச்ச னைக்கு தீர்வுகாண போக்குவரத்துத் துறை எவ்வித முயற்சியும் செய்ய வில்லை. இந்நிலையில், கோரிக்கைகளுக்கு அரசு தீர்வுகாண வலியுறுத்தி, அக்டோ பர் 9 அன்று கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 2000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள னர். எனவே, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனே விடு தலை செய்ய வேண்டும் எனவும், கோரிக்கைகளின் மீது தொழிற்சங்கத்து டன் பேசி தீர்வு காண வேண்டுமெனவும் சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வலி யுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.