சேலம், மார்ச் 27- ஓய்வுபெற்ற அரசுப் போக்கு வரத்து தொழி லாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் மூன்றாவது வாரத்தில், சென்னையில் பெரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் 6ஆவது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் 6-ஆவது மாநில மாநாடு சேலத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் நாள் அன்றே அனைத்து பண பலன்களையும் வழங்க வேண்டும்; டிஏ, அரியர்ஸ் முறையாக வழங்க வேண்டும்; மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஓய்வூதியர் களுக்கு முறையாக மேம்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் சட்ட மன்றம் நடைபெறும் போது, முற்றுகை போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில தலைவராக எஸ்.கிருஷ்ணன், பொதுச் செயலாளராக கே.கர்சன், பொருளாளராக ஏ.வரத ராஜன் மற்றும் 5 துணை செயலா ளர்கள் உள்ளிட்ட 48 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம் உரையாற்றினார்.