tamilnadu

img

போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சிறப்பு பென்சன் மாநாடு

அவிநாசி, மே 9- தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் அவிநாசி யில், சிறப்பு பென்ஷன் மாநாடு நடைபெற் றது. அவிநாசி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு பென்சன் மாநாட்டிற்கு, கோவை அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத் தின் கோவை மண்டல தலைவர் வேளாங் கண்ணிராஜ் தலைமை ஏற்றார். இதில், சங் கத்தின் சம்மேளன பொதுச்செயலாளர் கே. ஆறுமுகநாயினார் பங்கேற்று சிறப்புரையாற் றினார். புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பலன் (டிஏ) வழங்க வேண்டும்.  ஓய்வூதிய உரி மையை நிலை நிறுத்த, தனியார் மயம், ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னதாக, மாநாட்டில் சங்கத்தின் பொதுச்செயலாளர்கள் கோவை பரம சிவம், திருப்பூர் செல்லத்துரை, ஈரோடு  ஜான்சன்கென்னடி ஆகியோர் முன்னிலை  வகித்தனர். துணைத் தலைவர் வி.பிச்சை, துணைப் பொது செயலாளர் கனகராஜ், பன் முக தலைவர் ஈரோடு முருகையா, பொதுச் செயலாளர் துணைப்பொது செயலாளர் தயானந்தன், சிஐடியு மாவட்டக்குழு உறுப் பினர்கள் உன்னிகிருஷ்ணன், முத்துசாமி, ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.