tamilnadu

img

சமஸ்கிருத மொழிக்கு அதீத நிதி; செம்மொழி தமிழுக்கு அநீதி! மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

சமஸ்கிருத மொழிக்கு அதீத நிதி; செம்மொழி தமிழுக்கு அநீதி! மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

திருச்சிராப்பள்ளி, ஜூன் 25 - தமிழ் உட்பட நாட்டின் 22 அலு வல் மொழிகளையும் புறக்கணித்து, சமஸ்கிருத மொழிக்கு மட்டும் ரூ. 2,532 கோடி நிதியை, மோடி அரசு அள்ளிக் கொடுத்திருப்பது அநீதியானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. திருச்சி ராப்பள்ளியில் புதனன்று துவங்கிய கட்சியின் 2 நாள் மாநிலக்குழு கூட்டத் தில், இதுதொடர்பாக நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானம் வருமாறு: “நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, 2014 - 2015 ஆண்டு முதல் 2024 - 2025 வரையிலான பத்தாண்டு களில் சமஸ்கிருத மொழிக்கு மட்டும் 2,532.59 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி யுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய செம் மொழியாக அங்கீகரிக்கப்பட்ட 5 மொழி களுக்கு ரூ. 147.56 கோடி மட்டுமே ஒன்றிய அரசினால் செலவிடப் பட்டுள்ளது. தமிழை விட சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு அதிக நிதி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் மொழிக்கு மோடி அரசு, இந்திய மொழிகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இதுவரை வழங்கியது ரூ.113.48 கோடி மட்டுமே. இது சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 22 மடங்கு குறை வாகும். இந்த 5 மொழிகளின் வளர்ச்சிக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை யை விட சமஸ்கிருத மொழிக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை 17 மடங்கு அதிகமாகும். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளியாகியுள்ள மேற்கண்ட தகவல் ஒற்றைத் தன்மை யை திணிக்கும் ஆர்.எஸ்.எஸ். பாஜக வின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். 22 அலுவல் மொழிகளையும் புறக்கணிக்கும் பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் இயக்கப்படும் பாஜக தலைமை யிலான அரசு அனைத்து நிலைகளி லும் சமஸ்கிருதம் மற்றும் இந்தித் திணிப்பிலேயே முனைப்பாக உள் ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை  என்பதும் சமஸ்கிருத, இந்தி ஆதிக்கத் தை நிலைநிறுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 8- ஆவது அட்டவணையில் இடம்பெற் றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழி களை சம அந்தஸ்து கொடுத்து ஒன்றிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை மோடி அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. பன்முக பண்பாட்டுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் நீண்டகால வன்மம் ஆர்.எஸ்.எஸ். கருத்தியல் அடிப்படையிலேயே சமஸ்கிரு தத்திற்கு அதீத நிதியும், இன்றைக்கும் வாழ்வியல் மொழியாக திகழும் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கு மிகக் குறைவான நிதியும் ஒதுக்கப் பட்டுள்ளது. தமிழர் பண்பாட்டின் தொன்மையை எடுத்துரைக்கும் கீழடி அகழ்வாய்வு அறிக்கையை வெளியிட மோடி அரசு மறுப்பதும் தமிழ் மொழி மீதும், தமிழ்நாட்டு மக்கள்  மீதும், இந்தியாவின் பன்முக பண்பாட்டு வளர்ச்சி மீதும் ஒன்றிய அர சுக்கு இருக்கும் வன்மமே ஆகும். தமிழ் மொழி மீது பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் வெளிப்படுத்தும் “புகழ் மொழிகள்” வெறும் போலி நாடகமே என்பதை இப்போது வெளியாகியுள்ள புள்ளி  விவரங்களும் தெளிவாக எடுத்துரைக் கின்றன. ஒன்றிய அரசின் இத்தகைய பார பட்ச நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு வன்மையாகக் கண்டிக் கிறது. தமிழ் உள்ளிட்ட அனைத்து செம்மொழிகளுக்கும், இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழி களுக்கும் நியாயமான நிதி ஒதுக்கீடு  செய்யப்பட வேண்டும் என்று மாநிலக்குழு ஒன்றிய அரசை வலி யுறுத்துகிறது.” இவ்வாறு தீர்மானத்தில் கூறப் பட்டுள்ளது.