1,910 காலியிடங்கள்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
மாநிலஅரசின் பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்பக் காலிப்பணியிடங் களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம்(டி.என்.பி.எஸ்.சி) அறிவிக்கை வெளி யிட்டிருக்கிறது. இந்த அறிவிக்கை யின்படி 1,910 காலிப் பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். இதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்பப்பணி தேர்வு(Combined Technical Service Examination) நடத்தப்பட்டு தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்படு வார்கள். 58 வகையான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒவ்வொன்றுக்கு மான கல்வித்தகுதி, காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் பகிர்வு ஆகி யவை இணையதளத்தில் உள்ள முழு மையான அறிவிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளன. வயது வரம்பு - ஜூலை 1, 2025 அன்று குறைந்தபட்சம் 21 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதாக 32 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்ச்சி உள்ளது. கெமிஸ்ட் கிரேடு -1 (Chemist Grade-1) பணிக்கு 47 வயது வரை யிலும், இளநிலை பயிற்சி அலுவலர் (Junior Training Officer) பணிக்கு 37 வயதுவரையிலும் பொதுப்பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறை - மாநில அரசுப்பணி யில் சேரும் அனைவருக்குமே உரிய தமிழ்மொழித்திறன் தேர்வு கட்டாயமாக இருக்கும். மேலும் எந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக் கிறார்களோ அதற்குரிய பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். எழுத்துத் தேர்வில் பெறக்கூடிய மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். எழுத்துத்தேர்வு இரண்டு தாள்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். முதல் தாளில் தமிழ்மொழித்திறன் தேர்வு, பொதுப்பாடங்கள் மற்றும் கணிதம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இரண்டாவது தாளில் தொழில்பாடப் பிரிவுகளில் இருந்து வினாக்கள் இருக்கும். எழுத்துத்தேர்வு நடைபெறும் நாட்கள் - முதல் தாள் - ஆகஸ்டு 31, 2025 இரண்டாவது தாள் - செப்டம்பர் 7 முதல் 15 வரையில். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி - ஜூலை 12, 2025 விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விபரங்களைப் பெறுவதற்கு தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.inஇல் பார்வையிடலாம்.
பொதுத்துறையில் 266 பணியிடங்கள்
ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டுக்குள் உள்ள பொதுக் காப்பீட்டு நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பட்டதாரிகளுக் கான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் 266 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. பொது அலுவலர், மருத்துவர்கள், நிதித்துறை, சட்டம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் நிரப்பப்படும் இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்தத் துறைகள் சார்ந்த கல்வித்தகுதி தேவைப்படுகிறது. மேலும் பட்டப்படிப்பில் 60 விழுக்காடு மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் குறைந்தபட்சம் 55 விழுக்காடு மதிப்பெண் களும் பெற்றிருத்தல் வேண்டும். தேர்வு முறை - ஆன்லைன் முறையில் எழுத்துத்தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வு இரண்டு கட்டமாக நடைபெறும். முதல்நிலைத் தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடக்கும். இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வுக்கான மையம் சென்னையில் இருக்கும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வுக்கான பாடத்திட்டம் அறிவிக்கையில் விரிவாகத் தரப்பட்டிருக்கிறது. முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி - ஜூலை 20, 2025 இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வு - ஆகஸ்டு 31, 2025 விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி - ஜூலை 3, 2025 விண்ணப்பிப்பதற்கான இணைப்பு, விரிவான பாடத்திட்டம், காலிப் பணியிடங் களின் பிரிவுவாரியான எண்ணிக்கை உள்ளிட்டவற்றைப் பெற www.nationalinsurance.nic.co.inஎன்ற இணைய தள முகவரியைப் பார்வையிடலாம்.
பாதுகாப்பு சோதனையாளர் ஒன்றிய
அரசின் கீழுள்ள சரக்கு விமானப்போக்குவரத்து துறையில் பாதுகாப்பு சோதனையாளர் (Security screener) பணியிடங்களை நிரப்புகிறார்கள். 60% விழுக்காடு மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பட்டம் படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தமுள்ள 227 பணியிடங்களில் சென்னையில் 176 பணியிடங்கள் உள்ளன. ஜூன் 30, 2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்கள் www.aaiclas.aeroஎன்ற இணையதளத்தில் கிடைக்கும்.