tamilnadu

ஓய்வூதிய விதி திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

ஓய்வூதிய விதி திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, ஜூன் 25 - ஒன்றிய அரசு ஓய்வூதிய விதி களில் செய்துள்ள திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவுள்ளதாக அனைத்திந்திய அஞ்சல் மற்றும் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கம் அறிவித்துள்ளது. சங்கத்தின் மாநிலச் செய லாளர் பி. மோகன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: “ஓய்வு பெறும் நாளில் ஓய்வூ திய பணப் பலன்களையும், ஓய்வூதி யர் இறந்த மாதத்திலிருந்தே குடும்ப ஓய்வூதியத்தையும் வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டத்தை முறை யாக நடத்த வேண்டும்.” சம்பள ஆணையத்தின் பரிந்து ரைகள் அமல்படுத்தப் படும்போது, அதன் பலன் ஓய்வூதி யர்களுக்கும் கிடைத்து வந்தது. இதை மாற்றும் வகையில் கடந்த  மார்ச் மாதம் ஒன்றிய அரசு நிதி மசோதா வாயிலாக ஓய்வூதிய விதிகளில் திருத்தம் செய்துள் ளது. இதன்படி, பழைய ஓய்வூதி யர்களின் ஓய்வூதியம் உயராது. 8-ஆவது சம்பள ஆணையத்தின் பரிந்துரை பலன்கள் பழைய ஓய்வூதியர்களுக்கு கிடைக்காது. 50-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர் அமைப்புகள் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வுள்ளதாகவும், அக்டோபர் மாதம் தில்லியில் பேரணி நடத்த வுள்ளதாகவும் தெரிவித்தார்.  பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்திலும் ஓய்வூதியர்கள் பங்கேற்க வுள்ளதாக அறிவித்தார்.