விழுப்புரம்,மே.15- செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங் களில் கள்ளச்சாராயம் அருந்தி 14 பேர் உயிரி ழந்தது தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் எக்கி யார்குப்பத்தில் விஷ சாராயம் குடித்தவர் களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் உடனடியாக அருகிலுள்ள புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட னர். இவர்களில், எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் 9 பேரும், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்கரணை கிராமத்தில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 7 பேரும், புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் 35க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முதல்வர் ஆறுதல்
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செட்டியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரி ழந்தவர்களின் குடும்பத்தினரை திங்க ளன்று (மே 15) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு முண்டியம்பாக்கம் அரசு மருத்து வமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக உடனடி யாக ஆய்வுக் கூட்டத்தையும் முதலமைச்சர் நடத்தினார். அப்போது, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் இந்த பிரிவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இருக்கக்கூடிய எக்கியார்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பலர் கள்ளச் சாராயம் அருந்தியதால் உடல்நிலை பாதிக் கப்பட்டனர். இது அரசினுடைய கவ னத்திற்கு வந்தவுடன் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை போன்ற பல்வேறு மருத்து வமனைகளுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இது வரை 9 பேர் இறந்திருக்கிறார்கள்.
மேலும் 40 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும் 3 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், ஒருவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும் தற்போது சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்கி, உயிர்களை காப்பாற்றிடுமாறு மருத்துவர்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிகள், மெத்தனால் எரிசாராயத்தை பயன்படுத்தியதால், இந்தத் துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரின் நடவடிக்கையால் உடனடியாக கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், இந்தச் சம்பவம் நடைபெற காரணமாக இருந்த அனைவரையும் கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் காவல்துறை யால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டாஸ்மாக் பாட்டில்களில் கள்ளச்சாராயம்
செங்கல்பட்டு மாவட்டம், பெருக்கரணை கிராமத்தில் ஐந்து பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்த துயரச் சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. மேலும் ஏழு நபர்கள் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் உடனடியாக காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள். விசாரணையின் போது இங்கும் கள்ளச்சாராயம் விற்பனை செய்துள்ள வர்கள் மெத்தனால் பயன்படுத்தியுள்ள தாகவும், டாஸ்மாக் நிறுவனத்தினுடைய பாட்டில்களில் கள்ளச்சாராயத்தை ஊற்றி விற்பனை செய்திருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.
நிவாரணம்
இந்த இரு சம்பவங்களில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச் சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கிட உத்தரவிட்டிருக்கிறேன். மேலும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டி ருக்கக்கூடியவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டிருக்கிறது.
கைது செய்ய நடவடிக்கை
இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மட்டுமன்றி, இதற்குக் காரணமானவர்கள் அனைவரை யும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இதுதவிர, தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள் இத்தகைய கள்ளச்சாராய நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுவதை முழுமையாக தடுத்திடும் பொருட்டு, இப்பிரச்சனையின் மூலக்காரணத்தை கண்டுபிடித்து ஒழித்திட ஏதுவாக, இந்த இரு சம்பவங்கள் குறித்த விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்படும். மேலும் கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுத்திட வேண்டும் என்ற அரசின் கடுமையான உத்தரவை உரிய முறை யில் நடைமுறைப்படுத்தாமல், கள்ளச் சாராய விற்பனையை கண்காணிக்கத் தவறி யவர்கள் மீதும் இந்த அரசு தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.
நடவடிக்கை
இந்நிலையில் கள்ளச்சாராய விற்பனை யை தடுக்கத் தவறியதற்காக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பழனி, செங்கற்பட்டு மாவட்ட மதுவிலக்கு அம லாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பா ளர் ஆகியோரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சருடன் நடத்திய ஆய்வின் போது அமைச்சர்கள் க. பொன்முடி, எ.வ. வேலு, தா.மோ. அன்பரசன், செஞ்சி கே.எஸ். மஸ்தான், உள்துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, காவல்துறை தலைமை இயக்கு நர் செ. சைலேந்திரபாபு, காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சங்கர், மாவட்ட ஆட்சியர்கள் சி. பழனி (விழுப்புரம்), ஆ.ர. ராகுல் நாத் (செங்கல்பட்டு), வடக்கு மண்டல காவல்துறை தலைவர் என். கண்ணன், விழுப்புரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர் பி. பகலவன் மற்றும் பலர் உடனிருந்தனர்.