tamilnadu

img

தமிழக வீரர் விஷ்வா தீனதயாளன் துடிப்புமிக்க சாதனையாளர்

கவுகாத்தி, ஏப்.18-  மேகாலயா மாநிலத்தில் 83ஆவது தேசிய  டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான விஷ்வா தீனதயாளன் உள்பட 4 வீரர்கள் கார் மூலம்  அசாமில் இருந்து மேகாலயாவுக்கு ஞாயி றன்று புறப்பட்டு சென்றனர்.  அசாமின் கவுகாத்தியிலிருந்து மேகா லயாவின் ஷில்லாங்க் நோக்கி காரில் சென்று  கொண்டிருந்தபோது, சாலை விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் உயி ரிழந்தார்.  அவருடன் தமிழக டேபிள் டென்னிஸ் சம்மேளன வீரர்கள் சந்தோஷ் குமார், கிஷோர்  குமார், அபினேஷ் ஆகியோர் பயணித்துள் ளனர். அவர்கள் மூவரும் லேசான காயத்து டன் தப்பினர். எதிரே வந்த லாரி கட்டுப் பாட்டை இழந்து கார் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.

தமிழக வீரர்: 18 வயதான விஷ்வா லயோலா கல்லூரில் முதலாம் ஆண்டு வணிக வியல் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அவரது சகோதரி டேபிள் டென்னிஸ் விளையாடி வந்துள்ளார். சிறு வயதில் அதனைப் பார்த்து வளர்ந்த விஷ்வாவுக்கு தானும் தனது சகோதரியை போல டேபிள் டென்னிஸ் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது. தனது விருப்பத்தை பெற் றோரிடம் சொல்ல, அவர்களும் மறுப்பு  ஏதும் சொல்லாமல் பயிற்சியில் சேர்த்துள்ளனர். சென்னை - அண்ணா நகரில் உள்ள கிருஷ்ணசாமி டேபிள் டென்னிஸ் கிளப்பில் தான் விஷ்வா தொழில்முறை விளையாட்டு சார்ந்த பயிற்சி பெற்றுள்ளார். ராம்நாத் பிரசாத் மற்றும் ஜெய் பிரபு ராம் ஆகியோர் தான் விஷ்வாவின் பயிற்சியாளர்கள். இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் தான் விஷ்வாவின் ரோல் மாடல்.

ஜூனியர், சப்-ஜூனியர் என ஆரம்பம் முதலே அமர்க்களமாக விளையாடி வந்துள் ளார் விஷ்வா. அதன் பலனாக அவர்  பல்வேறு போட்டிகளை வென்றுள் ளார். தேசிய அளவில் 19 வயதுக்குட் பட்டோருக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்றவர். விஷ்வா 2018-ஆம் ஆண்டின் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான வீரர்களில் தலைசிறந்த வீரர், 2019-ஆம் ஆண்டில் தேசிய அளவி லான ஜூனியர் பட்டத்தையும் வென்றுள் ளார்.  இந்நிலையில், 83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக விஷ்வா சென்றிருந்தார். ஆனால், அவர் போட்டியில் பங்கேற்பதற்கு முன்னதாகவே சாலை விபத்தில் உயிரிழந்தார். 

தலைவர்கள் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; ‘‘டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஷ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சி யும், வேதனையும் அளிக்கிறது. சக வீரர் களால் போற்றப்பட்ட இவர், பல போட்டி களில் பங்கேற்று தனித்து விளங்கினார். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவ ரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி’’ இவ்வாறு குறிப்பிட்டுள் ளார்.   தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர்  பக்கத்தில், ‘‘ஓர் இளம் வீரர், நம்பிக்கை நட் சத்திரத்தின் அகால மரணம் அதிர்ச்சி அளிக் கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தி னர், நட்பு வட்டாரம் மற்றும் விளையாட்டு சகாக்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில், விஷ்வா தீனதயாளன் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தனது இரங்கல் குறிப்பில், ‘‘தமிழகத்தைச் சேர்ந்த வீரர் விஷ்வா தீனதயாளன் சாலை  விபத்தில் இறந்தார் என்பது வருத்தமளிக் கிறது. எங்கள் மாநிலத்தில் நடக்கும் போட்டி யில் பங்கேற்க வந்த அவருக்கு நேர்ந்த இந்த  முடிவு வருத்தத்தை அளிக்கிறது’’ என்று கூறியுள்ளார். மேலும் இந்திய டேபிள் டென்னிஸ் கூட்ட மைப்பு தலைவர் துஷ்யந்த் சவுத்ரி, விபத்தில் உயிரிழந்த விஷ்வா தீனதயாளன் குடும்பத் திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு ரூ.5  லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். இதே போல், ஹரியானா மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவும் விஷ்வா மர ணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடும் அறிவித்துள்ளார்.