tamilnadu

img

சூறைக்காற்றால் ராட்சத மரம் சாய்ந்ததால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்

சூறைக்காற்றால் ராட்சத மரம் சாய்ந்ததால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்

சேலம், மே 25- ஏற்காடு, சேர்வராயன் கோவில் செல்லும் பகுதியில் ராட்ச மரம் சாய்ந்ததால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தற்போது 48 ஆவது கோடை விழா நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், ஞாயிறன்று கடும் சூறைக் காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. அதன்படி, சேர்வராயன் கோவில் செல்லும் வழியில் ராட்சச மரம் விழுந்த தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், ஏற்காடு மலைப்பாதை இருவழிப்பாதையாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால் மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. மேலும், ஏற்காட்டில் பல முக்கிய சந்திப்புகளில் கால்நடைகள் நடமாட்டம் அதி கமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் சாலையில் திரியும் விலங் குகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.