பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன், தன்னுடைய 98-ஆவது வயதில் வியாழன் அன்று (செப்.28) இயற்கை எய்தினார். முதல் உலக உணவுப் பரிசு உட்பட சர்வதேச அளவிலான எண்ணற்ற விருது களைப் பெற்றவர் அவர். ஜவஹர்லால் நேரு மறைந்தபின்னர், லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானபின், வேளாண் அமைச்ச ராக வருவதற்கு காங்கிரஸ் தலைவர்களில் எவரும் முன்வரவில்லை. அப்போது இந்தியாவிலிருந்த உணவுப் பற்றாக்குறையையும், பசி-பட்டினிக் கொடுமையையும் சரி செய்வதற்காக பொறுப்பேற்கும் அமைச்சர் உலகம் முழுதும் சென்று உணவு தானியங்களுக்காக யாசிக்கும் நிலை அப்போது இருந்தது. நேருவின் அமைச்சரவையில் கனரகத் தொழில் துறை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியத்திடம், சாஸ்திரி வேளாண்துறையையும் அளித்திட்டார். இது தொடர்பாக சி.சுப்பிரமணியம் எழுதியுள்ள சுய வர லாற்றில், வேளாண் அமைச்சரானபின் முதன்முத லாகத் தான் அமைச்சரவை உயர் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தாமல், புதுதில்லியில் பூசா வேளாண்மை நிலையத்தில் பணியாற்றிவந்த வேளாண் விஞ்ஞானி களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்திருக்கிறார்.
இந்திய விவசாயத்தின் திருப்பு முனை
அப்போதுதான் விஞ்ஞானிகளில் ஒருவராகப் பணி யாற்றிவந்த எம்.எஸ்.சுவாமிநாதன், இதர விஞ்ஞானி களுடன் இணைந்து நின்று, மெக்சிகோ நாட்டில் பயன்படுத்தப்பட்டுவரும் உயர் விளைச்சல் ரக உணவுப் பயிர்களை, நம் நாட்டிலும் பயன்படுத்தினால் உணவு தானிய உற்பத்தியை அதிகரித்திட முடியும் என்று கூறியிருக்கிறார். இந்தக் கூட்டம்தான் இந்திய விவசாயத்திற்கான திருப்புமுனையாக அமைந்தது. பஞ்சாப், ஹரியானா, பீகார் மாநிலங்களில் உயர்ரக விதைகள் பயன்படுத்தப் பட்டு, பசுமைப் புரட்சிக்கு வழிகாணப்பட்டது. பின் நாட்களில், ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், பசுமைப் புரட்சிக்குப் பங்களிப்பு செய்ததற்காக அமைச்சர் சி. சுப்பிர மணியத்திற்கு பாரத ரத்னா விருது அளித்து சிறப்பித்தார். உலக அளவில் உயர்ரக கோதுமை மற்றும் நெல் விதைகளை உருவாக்கி, வளர்த்தெடுத்து, பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் என்று பார்லா (Borlaug) கொண்டா டப்படும் அதே சமயத்தில், இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியாவில் பசுமைப்புரட்சிக்கு வித்திட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆவார். எம்.எஸ்.சுவாமிநாதனின் வரலாறு படைத்திட்ட இந்த சாதனைதான் 1971இல் இந்தியாவை உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது. இதன்மூலம் இந்திய மக்கள் தங்கள் பசிப்பிணியை போக்க வெளிநாட்டுக் கப்பல்களின் வருகைக்காகக் காத்திருந்த அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி பிரதமரான பின்னர், உணவுப் பற்றாக் குறையைப் போக்குவதற்காக, அமெரிக்கா வுடன் செய்துகொண்டிருந்த பிஎல் 480 ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டார்.
மகத்தான சாதனை
1971இல் இந்தியாவில் உணவு உற்பத்தியில் தன்னி றைவு பெற்ற சாதனை என்பது, 1971இல் நிலவில் காலடி வைத்த மனிதனின் சாதனையைவிட மகத்தானதாகும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார். உலகப் புகழ்பெற்ற மக்கள்தொகை ஆய்வாளரான தாமஸ் மால்தஸ், இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கோடிக்கணக்கான மக்கள் பட்டினிக் கொடுமையால் மடிவார்கள் என்று கணித்திருந்தார். ஆனால் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியதன் மூலம் அதனைப் பொய்ப்பித்துவிட்டார். இதனைக் குறிப்பிட்டு நோபல் பரிசு பெறும்போது பார்லா, இந்தியாவின் சாதனையை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். பசுமைப் புரட்சி, என்றென்றும் பசுமைப்புரட்சியாக நீடித்திட சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி யதன் அவசியத்தை 2010இல் எழுதியுள்ள “பசுமையி லிருந்து என்றென்றும் பசுமைப் புரட்சியை நோக்கி” (“From Green to Evergreen Revolution) என்னும் தன் புத்தகத்தில் விளக்கியிருக்கிறார் எம்.எஸ்.சுவாமிநாதன். இதில் அவரை நீர் சிக்கனமாகப் பயன்படுத்துவது, மரபணுப் பயிர்கள் மற்றும் பல்வேறு உணவுப் பொருள்கள் வளர்ப்பு முறைகளை அவர் விளக்கி இருக்கிறார். விவசாயம் செய்யும்போது உரம் பயன்படுத்துவதை, மனிதன் நோய் வந்தால் அதற்குத் தேவையான மருந்தைப் பயன்படுத்து வதுபோல் இருந்திட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். விவசாய நெருக்கடி காரணமாக தற்போது விவசாயி கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்திருக்கிறது. இதனைத் தடுத்திட, விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது விவசாய உற்பத்திச் செலவினங்களுடன் ஒன்றரை மடங்கு சேர்த்து நிர்ண யம் செய்திட வேண்டும் என்று தன்னுடைய ஆணை யத்தின் அறிக்கையில் பரிந்துரைத்தது, இவரது ஆகப் பெரும் சாதனை ஆகும்.
(கட்டுரையாளர் : கே.ஆர்.நாராயணன் ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு தனி அதிகாரியாக இருந்தவர்.)
தமிழில்: ச.வீரமணி