tamilnadu

img

கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல்,ஜன.22- கொடைக்கானலில் கொரோனா கட்டுப்பாடுகளால் மூடப்பட்டிருந்த பேரிஜம் ஏரிக்குச் செல்ல 2 ஆண்டுக ளுக்குப் பிறகு முதல் சுற்றுலா பயணிக ளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் தோட்டக் கலைத் துறையின் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் கார்டன், நகராட்சியின் கோக்கர்ஸ்வாக், சுற்று லாத் துறையின் படகு சவாரி, வனத்  துறையின் மோயர் பாய்ண்ட், குணா குகை, தூண்பாறை, பசுமை பள்ளத் தாக்கு, பைன்பாரஸ்ட், மன்னவனூர் சுற்றுச்சூழல் பூங்கா, பேரிஜம் ஏரி ஆகிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இவற்றில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப் பட்ட வனப் பகுதியில் உள்ளது. இதனால் வனத் துறையினரிடம் அனுமதி  பெற்ற பிறகே சுற்றுலா பயணிகள் ஏரிக்கு செல்ல முடியும். பேரி ஜம் ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பி தூக்கி பாறை, மதிகெட்டான்சோலை, வியூ பாய்ண்ட், அமைதி பள்ளத் தாக்கு மற்றும் பசுமை போர்த்திய மலைத் தொடர்கள் என இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க லாம். இதனால் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரி பகுதிக்குச் செல்ல அதிக  ஆர்வம் காட்டுவர். இந்நிலையில் பேரிஜம் ஏரிப் பகுதிக்கு செல்லும் சாலைகளைப் புதுப் பிக்க 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  மூடப்பட்டது.

தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஓரா ண்டுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்ததால் பிற சுற்றுலாத்தலங்கள் திறக்கப் பட்டன. பேரி ஜம் ஏரிக்குச் செல்ல தடை நீடித்தது. இர ண்டாவது அலையிலும் பேரிஜம் ஏரி மூடப் பட்டிருந்தது. ஏரிப்பகுதிக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணி கள், சுற்றுலா டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு  பேரிஜம் ஏரி பகுதிக்குச் செல்ல, ஜன.21 வெள்ளிக்கிழமை முதல் சுற்றுலா பயணி களுக்கு வனத் துறையினர் அனுமதி அளித்துள்ளனர். வனத் துறை அலுவல கத்தில் ரூ.200 கட்டணம் செலுத்தி அனு மதி பெற வேண்டும். நாள் ஒன்றுக்கு 50 அனுமதிச் சீட்டுகள் மட்டுமே வழங்கப்ப டும் என வனத்துறையினர் தெரி வித்துள்ளனர்.