நெல்லையில் 204 பேருக்கு கொரோனா
திருநெல்வேலி, ஜூலை 24- திருநெல்வேலி மாவட் டத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் தற்போது தினசரி குறைந்தது சராசரியாக 100 பேருக்கு மேல் பாதிப்பு உறுதி செய்யப் படுகிறது. இதில் வெள்ளி யன்று மாவட்டத்தில் மேலும் 204 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத னால் கொரோனா பாதித் தோர் எண்ணிக்கை 3243 ஆக உள்ளது. 1,886 பேர் குணம டைந்து வீடு திரும்பி உள்ள னர். 1,318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குமரியில் பரவலான மழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நாகர்கோவில்: குமரி மாவட்டத் தில் கடந்த சில தினங்களாக வறண்ட தட்ப வெப்ப நிலை நிலவி வந்தது. இந்நிலையில் வெள்ளியன்று அதிகாலை முதல் மாவட்டத்தில் நாகர்கோவில், தாழக்குடி, கீரிப் பாறை, இரணியல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத் தில் குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. மலைப்பகுதிக ளில் பெய்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு சுமார் 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த அணையில் இருந்து தற்போது 700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை யில் தற்போது 29.80 அடி தண்ணீர் உள்ளது. இதே போன்று 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ் சாணி அணையில் 46.70 அடி தண்ணீர் உள்ளது. குமரி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ., பால்துரைக்கு கொரோனா தொற்று
தூத்துக்குடி, ஜூலை 24- தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீ சார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜ் குடும்பத் தாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கைதான 10 காவலர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், விசாரணை குழுவில் இருந்த 4 சிபிஐ அதிகாரி களுக்கு கொரோனா தொற்று உறுதி யாகியுள்ளது. இதையடுத்து சிபிஐ அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. மேலும் சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரைக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிறப்பு அதி காரிகளின் விசாரணைக்குப் பிறகு பால்துரை உள்ளிட்ட 3 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜூலை 31-ஆம் தேதி வரை நாசரேத் பகுதியில் கடையடைப்பு
தூத்துக்குடி, ஜூலை 24- தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் சுற்று வட்டாரத்தில் சுமார் 10 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளை ஏற்று நாசரேத்தில் கடைகள் அடைப்பது குறித்து வியாபாரிகள் ஆலோசனை நடத்தி அதற்கான அறிவிப்பை வெளியிட்டனா். அதன்படி, வெள்ளியன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை அனைத்து கடைகளும் மூடப்படும் என நாசரேத் நகர வியாபாரிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்த்து. அதன்படி நாச ரேத் நகரத்தில் மருந்துக் கடைகள், ஹோட்டல்கள் உள்பட ஒரு சில கடைகள் தவிர 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.