சென்னை, ஜூலை 29- சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. நாடு முழுவதும் தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெளிச்சந்தையில் தக்காளியின் விலை குறைந்தபாடில்லை. வெளிச் சந்தையில் தக்காளி ஒரு கிலோ 130 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தை யில் மொத்த விற்பனை விலையில் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி, சனிக்கிழமை ரூ.10 அதிகரித்து ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. முதல் தர தக்காளி 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் சின்ன வெங்காயம் கிலோ 90 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டது. சமையலுக்கு முக்கிய தேவையாக உள்ள தக்காளி மற்றும் சின்ன வெங்காய விலையை கட்டுப் படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.