இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரான தோழர் தசரத் தேவ், 1916 பிப்ரவரி 2 அன்று, திரிபுராவின் அம்புரா கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். குழந்தை பருவத்திலிருந்தே, கல்வி கற்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார் தசரத் தேவ். ஆனால், அப்போது திரிபுராவை ஆட்சி செய்த நிலப்பிரபுத்துவ பழங்குடி மன்னர், கிராமங்களிலும், மலைகளிலும் வாழும் பழங்குடியினருக்கு ஆரம்பப் பள்ளிகள் அமைக்க எந்த முயற்சி யும் எடுக்கவில்லை. எனினும், கல்வி மீதான அதீத ஆர்வத்தால் சட்டப் படிப்பு வரை முடித்தார் தேவ். பழங்குடியின மக்களுக்கு கல்வி வழங்குவதில் முன்னுரிமை அளித்த கம்யூ னிஸ்ட் கட்சி, ஒரு அமைப்பை உருவாக்கு வது என முடிவு செய்தது. இப்பணிகள் குறித்து தசரத் தேவுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்பு, படித்த பழங்குடி இளைஞர்கள் 11 பேரைக் கொண்டு 1945 டிச.27 இல் ஜனசிக்ஷா சமிதி என்ற அமைப்பு உருவானது. இதன் துணைத் தலைவராக தசரத் தேவ் செயல்பட்டார். இந்த அமைப்பு துவங்கிய சில மாதங் களிலேயே, பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் மலைகள், கிராமங்களில், கிட்டத்தட்ட 400 பள்ளிகள் நிறுவப்பட்டன. பள்ளிக்கான கட்டிடங்களை கிராம மக்களே கட்டினர். மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து ஜனசிக்ஷா சமிதிக்கு ஆதரவாக ஏராளமான பழங்குடியின மக்கள் திரண்டு வந்தனர். இந்தப் பள்ளிகளுக்கு அரச நிர்வாகம், அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று, கல்வி அமைச்சராக இருந்த ஆங்கிலேய அதிகாரி பிரவுன், 300 பள்ளிகளுக்கு அங்கீ காரம் வழங்கினார். இந்தப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளித்ததற்காக, மகாராஜா பிர் பிக்ரம் கிஷோர் தேபர்மன், அமைச்சர் பிரவுன் மீது கோபமடைந்தார். இதனால், பிரவுன் தனது பதவியை ராஜினாமா செய்து, மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவானது.
1946 இல் ஜனசிக்ஷா சமிதி தலைவர்கள் மீது வழக்குப் பதிய காவல்துறைக்கு உத்தர விட்டார் அரசர். மேலும், இந்த அமைப்புக்கு இணையாக ‘திரிப்பூர் சங்கா’ என்ற பெய ரில் மற்றுமொரு அமைப்பு உருவாக்கப் பட்டது. மகாராஜா பிர் பிக்ரம் கிஷோர் இறந்த பிறகு, திரிபுராவில் திவான் ஆட்சி நடந்தது. அப்போது, ஜனசிக்ஷா சமிதி தலை வர்கள் மற்றும் ஆதரவாளர்கள், பழங்குடி இளைஞர்கள் மீதான தாக்குதலும் அடக்குமுறைகளும் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த அரச பயங்கரவாதத்தை எதிர்த்து, ஆயுதமேந்திய அமைப்பை உருவாக்கு வது அவசியம் என்று ஜனசிக்ஷா சமிதி யின் தலைவர்கள் கருதினர். அதன்படி, 1948 மார்ச்-இல் தசரத் தேவ் தலைமை யில் திரிபுரா ராஜ்ய முக்தி பரிஷத் உரு வாக்கப்பட்டது. இந்த பரிஷத் அரசியல் மற்றும் ஆயுதம் என இருபிரிவுகளைக் கொண்டது. தோழர் தசரத் தேவ் மற்றும் அவரது சகாக்கள் காவல்துறை, ராணு வத்தின் அட்டூழியங்களை எதிர்த்துப் போராட ஒவ்வொரு கிராமத்திலும் முக்தி பரிஷத் பிரிவுகளை உருவாக்க கடுமை யாக உழைத்தனர். இந்த முக்தி பரிஷத் அமைப்பின் போராட்டத்தைக் கண்டு காவல்துறையே வியப்படைந்தது. 1949 அக்.15 அன்று, திரிபுரா இந்திய யூனி யனுடன் இணைந்ததால், ரீஜென்சி மற்றும் திவானி ஆட்சி முடிவுக்கு வந்தது. பின்னர் சில ஆண்டுகளில், மாநிலத்தின் பெரும்பா லான பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் ‘சுதந்திர நிலமாக’ மாறின. 1950 இல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த தசரத் தேவ், ஓர் ஆண்டிற்குள் கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினரானார். பின்பு, 1952, 1957, 1962, 1971 இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவ், மாநில மக்கள் எதிர்கொள்ளும் பிரச்ச னைகள் மற்றும் பழங்குடியின மக்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதன் அவ சியம் குறித்து மக்களவையில் குரல் கொடு த்தார். மாநிலத்தில், பழங்குடி மற்றும் பழங்குடியினர் அல்லாத சமூகங்களுக்கு இடையே ஒரு பாலமாகவும், ஒற்றுமை மற்றும் நட்பின் அடையாளமாகவும் திகழ்ந்தார். மாநிலத்தின் துணை முதல்வ ராகவும், முதல்வராகவும் செயல்பட்டார். தோழர் தசரத் தேவ் ஒரு சிறந்த எழுத்தாளரும்கூட. தன் வாழ்நாள் முழு வதும் திரிபுரா மாநிலத்தின் ஒற்றுமைக்கும், பழங்குடியினரின் உரிமைகளுக்காகவும் போராடிய தசரத் தேவ், 1998 அக்.14 அன்று காலமானார்.