tamilnadu

img

தளபதிகளாகலாம், வாங்க...

இன்றைக்கு முப்படைத் தளபதிகளாக இருக்கும் மூவ ருமே பள்ளிக்கூடப் படிப்பை நிறைவு செய்தவுடன் ராணுவத்தில் சேர்ந்தவர்களாவர். இளம் வயதி லேயே ராணுவத்தில் சேர்க்கை தொடங்கி விடுகிறது. பணி யாற்றுவதற்குத் தேவையான கல்லூரிப் படிப்பை ராணுவமே அவர்களுக்கு வழங்கிவிடும். 10+2 முடித்தவர்களுக்கு National Defence Academy நடத்தும் தேர்வுகள் மூலமாகத் தரைப்படை மற்றும் விமா னப்படை ஆகியவற்றில் சேரலாம். Indian Naval Academy தேர்வு மூலமாக கப்பற்படையில் சேரலாம். தரைப்படைக்கு 10+2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விமானப்படை மற்றும் கப்பற்படைக்கு 10+2வில் இயற்பியல் மற்றும் கணிதப்பாடங்களும் இருக்க வேண்டும். இப்படிச் சேருபவர்கள்தான் உயர்பதவிகளுக்கு வரு கிறார்கள். பொறியியல், கல்வியியல், வானிலை, வணிக வியல் உள்ளிட்ட படிப்புகளில் முதுநிலைப்பட்டம் பெற்ற பிறகும் ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் சேர்ந்து கொள்ள லாம். அதிகாரிகள் அல்லாத படைவீரர்களாக சேருவதற்கு பத்தாம்  வகுப்பு நிறைவு செய்திருந்தாலே போதுமானது. தொழில்நுட்பம்  அல்லாத எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பத்தாம்  வகுப்பு நிறைவு செய்தவுடன் விண்ணப்பிக்கலாம். தொழில் நுட்பப் பிரிவில் பணியாற்ற 10+2 தேவை என்பதோடு கணிதம்  மற்றும் அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். பொதுவாக மார்ச், அக்டோபர் மாதங்களில் செய்தித் தாளில் விளம்பரமாக வெளியிடப்படும். 

சிறப்பிதழ் தொகுப்பு: கே.கணேஷ்
முன்னாள் விமானப் படை அலுவலர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி
தொடர்புக்கு: 94420 60775