மதுரை:
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற மதுரையைச் சேர்ந்த பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி பூரணசுந்தரிக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மதுரையைச் சேர்ந்தபார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி இளம்பெண் பூரணசுந்தரி அவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ்தேர்வில் அகில இந்திய அளவில் 286-வது இடம் பெற்றுவெற்றி பெற்றார். சிறுவயதில் ஏற்பட்ட பார்வைத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பூரணசுந்தரிதனது கடின உழைப்பால்இத்தேர்வில் வெற்றிபெற்றார். அவரது வெற்றியை தமிழக மக்கள் தங்களது வெற்றியாக கொண்டாடினார்கள்.
286-வது ரேங்க்கில் வெற்றிபெற்ற அவருக்கு இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், அவருக்கு இந்திய வருவாய்த் துறை (ஐஆர்எஸ்) பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவில் 304வது இடம் வரைபெற்றவர்களுக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கியுள்ள நிலையில் 286வது இடம் பெற்ற பூரணசுந்தரிக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கப்படாதது எந்தவகையிலும் நியாயமானதல்ல. மேலும்,மாற்றுத்திற னாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் அவருக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கியிருக்க வேண்டும். பூரணசுந்தரி தனக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கவேண்டும் என்று மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளார். எனவே,மத்திய அரசு இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு பூரணசுந்தரிக்கு நியாயம்கிடைத்திட உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.