tamilnadu

img

கொரோனாவைக் கண்டறிய ஏழு லட்சம் பரிசோதனைக் கருவிகள்: இந்திய மருத்துவக் கவுன்சில் தகவல்

மதுரை, ஏப்.6- கொரோனா ரைவஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. அது சமூகப் பரவலாக மாறும் ஆபத்தும் உள்ளது என மருத்துவர்கள் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸை கண்டறியும் அதிநவீன பரிசோதனைக் கருவிகளை வாங்க இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் (ஐசிஎம்ஆர்)  முடிவு செய்துள்ளது. சுமார் ஏழு லட்சம் பரிசோதனை கருவிகளுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருவிகள் கொரோனா தாக்கம் அதிகமுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் முதற்கட்டமாக ஐந்து லட்சம் பரிசோதனை கருவிகள் கிடைத்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.