தஞ்சாவூர், டிச.21 - திருமண்டங்குடி திருஆரூ ரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தெரியாமல் மோ சடியாக பெற்ற கடனிலிருந்து விவ சாயிகளை விடுவிக்க வேண்டும். புதிய நிர்வாகம் விவசாயிகளிடம் குழப்பம் ஏற்படுத்துவதை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது; விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகைகளை வட்டி யுடன் வழங்க வேண்டும் என கடந்த 22 தினங்களாக கரும்பு விவ சாயிகள் போராடி வருகிறார்கள். இப்பிரச்சனையில் தமிழக அரசு நேரடியாக தலையிட்டு முடி வுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நடை பெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை ஆதரித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் சார்பில், புதன்கிழமை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடை பெற்றது. போராட்டத்துக்கு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்தி ரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வேல் மாறன், மாநிலச் செயலாளர்கள் டி.காசிநாதன், எஸ்.நாராயண சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், பொருளாளர் எம்.பழனிஅய்யா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், தமிழ் தேசிய பேரி யக்கம் மாநிலச் செயலாளர் வைகறை, இந்திய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ் மற்றும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆட்சியர் அலுவலகம் அரு கில் உள்ள பேருந்து நிறுத்தத்தி லிருந்து ஊர்வலமாக சென்று ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிட முயன்ற விவசாயிகளை, காவல்துறையினர் இரும்பு தடுப்பு அமைத்து தடுத்தனர். தடுப்பு வேலிகளை தாண்டி விவசாயி கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடமுயன்றனர். இத னால், காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொட ர்ந்து, காவல்துறையினர் ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல விடா மல் அனுமதி மறுத்ததால், சாலை யில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக கரும்பு விவசாயி கள் சங்க பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் திரு மண்டங்குடி, திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்படவில் லை. கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் ஆலையை மூடி விட்டனர். விவசாயிகளின் பெய ரில், வங்கிகளில் 300 கோடி ரூபாய் மோசடியாக கடனை வாங்கிக் கொண்டு, விவசாயிகளை கட னாளியாக்கி விட்டனர். தற்போது கால்ஸ் நிறுவனம் ஆலையை வாங்கி உள்ளது. ஆனால் விவசாயிகளின் பிரச்சனையை புதிய நிர்வாகம் தீர்க்கவில்லை. பழைய ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை யும் வழங்கவில்லை. விவசாயி கள் பெயரில் வங்கியில் வாங்கிய கடன் தொகையும் செலுத்த மறுத்து வருகின்றனர். விவசாயிகளை கடனாளி யாக தெருவில் நிறுத்தி உள்ள னர். இதில் 15,000 கரும்பு விவசாயி களின் குடும்பம் பாதிக்கப்பட்டுள் ளது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடந்து வரு கிறது. ஆலை நிர்வாகம் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், நட வடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினோம். கடந்த அதிமுக ஆட்சியில் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. தற்போதைய அரசு இப்பிரச்சனைகளில் தலை யிடவில்லை. விவசாயிகள் பெயரில் கடன் வாங்கி மோசடி செய்த, மோசடிப் பேர்வழி இன்று வெளியில் உள் ளார். இதுவரை அவரை கைது செய்யவில்லை. விவசாயிகளின் பெயரில் உள்ள கடன் தொகை யை மாநில அரசு, புதிய ஆலை நிர்வாகத்தின் பெயரில் மாற்றி விட்டு, விவசாயிகளை கடனி லிருந்து விடுவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை வட்டி யுடன் சேர்த்து மாநில அரசு பெற்றுத் தர வேண்டும். முதல்வர் இதில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.