இந்தியாவின் ஆவணப்பட இயக்குநர்களுள் முக்கியமானவர் ஆனந்த பட்வர்தன். அவருடைய பல ஆவணப்படங்கள் தேசிய அளவிலும், சர்வதேசிய அளவிலும் பாராட்டுக்க ளும், விருதுகளும் பெற்றது. இந்துத்துவ சக்திகளை அம்பலப்படுத்துவதில் அவருடைய ஆவணப்படங்கள் பெரும்பங்காற்றியிருக்கின்றன. அதனாலேயே சங்பரிவாரங்களின் கோபத்துக்கும், எதிர்ப்புக்கும் ஆளானவர் அவர். எனினும் சமரச மின்றி ஆவணப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். கனடாவின் டொராண்டோ நகரில் இவ்வாண்டு ஏப்ரல் 28 இல் துவங்கி நடைபெற இருக்கிற “ஹாட் டாக்ஸ்” (Hot Docs) எனும் ஆவ ணப்படங்களின் திரையிடல் விழாவில் சாதனையா ளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட இருக்கிறார். அவரின் இன் த நேம் ஆப் காட் (In the Name of God/1992) ஜெய்பீம் (Jai Bhim/2011) போன்ற படங்களைப் பலரும் பார்த்திருக்கலாம். 1981இல் வெளிவந்த “ஏ டைம் டு ரைஸ்” டெல்லி யில் நடைபெற்ற மாபெரும் விவசாயிகளின் எழுச்சிகரமான போராட்ட காலத்தில் இணைய வழியில் பார்வைக்கு வந்தது. 1980 களில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் அந்நாட்டின் முதல் “விவசாயத் தொழி லாளர் சங்கம்” பிறந்து, வளர்ந்த நிகழ்வுகளை சுருக்க மாக அதே நேரத்தில் அழுத்தமாகப் பதிவு செய்தி ருக்கிறது இந்த ஆவணப்படம்.
1900 மாவது ஆண்டுகளில் ஆசிய நாடுகளி லிருந்து பலரும் கனடா சென்று குடியேறுதல் தீவிர மாக நடந்துள்ளது. குறிப்பாக இந்தியாவிலிருந்து சீக்கியர்கள் பெருமளவில் புலம் பெயர்ந்து கனடா சென்றுள்ளனர். அக்காலத்தில் கனடாவில் நிலங்கள் வெள்ளையின பெருமுதலாளிகளுக்கு சொந்தமாக இருந்து வந்துள்ளன. ஸ்டராபெர்ரி பயிரிடப்பட்ட தோட்டங்களில் வேலை பார்த்த தொழிலாளர்களில் 10 விழுக்காடு வெள்ளையர்கள், 10 விழுக்காடு சீனர்கள் போக, மீதம் 80 விழுக்காடு சீக்கியர்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனை வரும் சென்று தோட்டங்களில் வேலை பார்த்துள்ள னர். அவர்களை கூலிகளாக வைத்து வேலை வாங்குபவர்களாக சீக்கியர்களே ஒப்பந்ததாரர்க ளாகவும் இருந்துள்ளனர்.
பறவைக் கூடு போன்ற வீடுகளில் வாழ்ந்த இவர் களின் நிலை படுமோசமாக இருந்துள்ளது. எனவே இவர்கள் சங்கம் துவக்கியுள்ளனர். ஒப்பந்தக் காரர்களுக்குப் பதிலாக தொழிலாளர் சங்கங்க ளோடு நில முதலாளிகள் நேரடியாக ஒப்பந்தம் போட வேண்டும். கூலி உயர்வு, வேலை இடத்தில் குடி தண்ணீர், கழிப்பறை வசதிகள் போன்றவை கோரிக்கைகளாக வைக்கப்பட்டன. நிலமுதலாளிகளும், ஒப்பந்ததாரர்களும் சேர்ந்து தொழிலாளர் சங்கங்களை ஒழிக்க பெரும் பிரயத்தனம் செய்துள்ளனர். சங்க முன்னோடிகளின் வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்குவதில் ஆரம்பித்து சங்கத் தலைவர்கள் மீது கொலை வெறித் தாக்குதலையும் மேற்கொண்டனர். 1980 களில் கனடாவில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங் கள் மாபெரும் அங்காடிகளைத் தங்கள் வசம் வைத்திருந்தன. விவசாயத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்தால் உணவுப் பொருட் களின் விலை உயரும் என்று பொது மக்களிடையே ஒரு பொய்ப் பிரச்சாரத்தை நில முதலாளிகளும் இந்த கார்ப்பரேட் விற்பனை யாளர்களும் சேர்ந்து அவிழ்த்து விட்டனர்.
எல்லாத் தடைகளையும் தாண்டி பத்தாயிரக்க ணக்கில் தொழிலாளர்கள் கனடா விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கீழ் திரண்டனர். கூட்டங்கள், ஊர்வலங்கள், வேலை நிறுத்தப் போராட்டங்கள் என நூற்றுக்கணக்கில் இயக்கங்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக பெண்கள் அச்சமின்றி சங்கத்தின் கீழ் திரண்டனர். சங்கம் எங்கள் உயிரை விட மேலானது என்று முழங்கினர். ஒரு கட்டத்தில் அரசு தலையிட்டு விவசாயத் தொழிலாளர்களுக்குச் சாதகமாக சில சட்டங்களை இயற்றியது. நில உரிமையாளர்கள் மெல்ல மெல்ல ஒப்பந்த தாரர்களை தவிர்த்து நேரடியாக தொழிலாளர் சங்கங்களோடு ஒப்பந்தம் போட்டனர். இதனால் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு மற்றும் இதர சலுகைகள் கிடைத்தன. சங்கமாகத் திரண்டு ஒற்றுமையாகப் போராடினால் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலையை அடைந்தார்கள். மகத்தான இந்தப் போராட்ட காலத்தை ஆவணப் ப்படுத்தியுள்ள இயக்குநர்களை வெகுவாகப் பாராட்டுகிற தருணத்தில் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகள் சினிமாவாக ஆவணப்படுத்தப்பட்டு அவை மக்களைச் சென்றடைய இளைய இயக்குநர்கள் பலர் உருவாகி வர வேண்டும்.