கவிஞர் பாரதியின் பிறந்த நாள் மற்றும் பாரதி நினைவு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் எழுதிய “கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி” என்னும் நூல் வெளியீட்டு விழா, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நூலின் முதல் பிரதியை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வெளியிட, திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன், டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.