கொல்கத்தா, பிப்.22- மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியரும் தலைவர்களில் ஒருவரும் இந்திய மாணவர் சங்கத் தலைவருமான அனீஷ்கான் கொல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை இரவு ‘காவல்துறை சீருடை’ அணிந்தவர்கள் அம்தாவில் உள்ள அனீஷ்கானின் வீட்டிற்குச் சென்று, அவரை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அவரை அடித்து தூக்கி வீசினர். இதில் அனீஷ்கான் உயிரிழந்தார். அனீஷ் கொல்லப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன. அனீஷ் மரணத்திற்கு திரிணா முல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர் ஒருவர் மூளையாக செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் அனீஷ் மரணத்திற்கு நீதிகேட்டும் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் செவ்வாயன்று கொல்கத்தாவில் ஆவேசமிக்க பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில் மாண வர் சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் மயூக் பிஸ்வாஸ், இணைச் செயலாளர் திப்சிதா தர், புவாத் ஹலீம், தேப்தத் கோஷ், ஸ்ரீஜிப் பட்டாச்சார்யா உட்பட பல்லா யிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அனீஷ்கான் கொலையை சிபிஐ விசாரிக்க வேண்டுமென அவரது குடும்பத்தி னர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், முதல்வர் மம்தா பானர்ஜி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அனீஷ்கான் குடும்பத்தினர் தங்களுக்கு மேற்குவங்க காவல்துறை மீது நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அனீஷ்கானின் செல்போனை காவல்துறையினர் அவரது வீட்டிலிருந்து பெற முயன்றனர். அவரது தந்தை சாலம்கான் செல்போனை கொடுக்க மறுத்துவிட்டார். செல்போனை நாங்கள் நீதிமன்றத்திட மோ அல்லது சிபிஐயிடமோ தான் ஒப்படைப் போம். காவல்துறை ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளது என்றார் அனீஷ்கானின் சகோதரர்.