புதுக்கோட்டை, ஜன.30- புதுக்கோட்டை வனச் சரகத்துக்கு உட்பட்ட அன்னவாசல் கண்மாய், ஆரி யூர் கண்மாய், அருவாக்குளம், கவிநாடு கண்மாய், அறந்தாங்கி வனச் சரகத்துக்குட்பட்ட பொன்பேத்தி ஏரி, செய்யானம் ஏரி, கரகத்திக்கோட்டை கண்மாய், முத்துக்குடா கடல், கோடியக்கரை கடல், பொன்னமராவதி வனச் சரகத்துக்குட்பட்ட காரையூர் காரை கண்மாய், ஒலியமங்கலம் கண்மாய், ஏனாதி கண்மாய், கொன்னை கண்மாய், கீரனூர் வனச் சரகத்துக்குட்பட்ட நீர்பழனி கண்மாய், ஒளவையார்பட்டி கண்மாய், பேராம்பூர் கண்மாய், குளத்தூர் கண்மாய், திரு மயம் வனச் சரகத்துக்குட்பட்ட தாமரை கண்மாய், பெல் ஏரி, நல்லம்மாள் சமுத்திரம் ஆகிய 20 இடங்களில் பறவை கள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை வனச் சரகத்தில் 2,227 பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதி களில் நத்தை குத்தி நாரை, பவளக்கால் உள்ளான், கருந்தலை அரிவாள் மூக்கன், செந்தலை வல்லூறு, பூனைப் பருந்து, சிறிய சீழ்க்கை சிரவி போன்ற அரியவகைப் பறவைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அறந்தாங்கி வனச் சரகத்தில் 6,380 பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் வண்ண நாரை, கரண்டி வாயன், பழுப்பு தலை கடற்புறா உள்ளிட்ட பறவைகள் அடை யாளம் காணப்பட்டு பதிவு செய்யப் பட்டுள்ளன. திருமயம் வனச் சரகத்தில் 1,251 பறவைகளும், பொன்னமராவதி வனச் சரகத்தில் 1,613 பறவைகளும், கீரனூர் வனச் சரகத்தில் 290 பறவைகளும் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டு ள்ளன. மொத்தத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 இடங்களில் நடை பெற்ற கணக்கெடுப்பில் 11,761 ஆயிரம் பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ள தாகவும், இவற்றில் பெரும்பாலான வை வெளிநாடுகளில் இருந்து வலசை வந்த பறவைகள் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.