tamilnadu

ஓஎன்ஜிசி பிராந்திய தலைமை அலுவலகத்தை சென்னையிலிருந்து மாற்றும் முயற்சியை கைவிடுக!

சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை,மே 31- எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு  நிறுவனத்தின் (ஓ.என்.ஜி.சி.) பிராந்திய தலைமை அலுவலகத்தை சென்னையி லிருந்து மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கடந்த 2003 ஆம் ஆண்டு  முதல், ஆந்திரப் பிரதேசம் மாநிலம் ராஜமுந்திரியைச் சுற்றியுள்ள கிருஷ்ணா - கோதாவரி எண்ணெய் படுகை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள காவிரி எண்ணெய் படுகை ஆகியவற்றின் எண்ணெய் வளம் குறித்து புவியியல் ஆய்வு மூலம்  எண்ணெய் படுகைகளை கண்டறிவ தும், அதிலிருந்து இயற்கை எரி வாயுவை பிரித்தெடுப்பதற்குமான செயல்பாடுகளை ஒருங்கிணைப்ப தற்கான தலைமையகம் சென்னையில் இயங்கி வருகிறது. இதற்கு முன்ன ரும் ஒரு சில  சந்தர்ப்பங்களில் இந்த அலு வலகத்தை பிரித்து ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு, ஜனநாயக இயக்கங்கள் மற்  றும் ஊழியர்களின் எதிர்ப்பு காரணமாக  அது கைவிடப்பட்டது.  தற்போது மீண்டும் கிருஷ்ணா -  கோதாவரி படுகை குறித்த செயல்பாடு களுக்கான அலுவலகத்தை சென்னை யிலிருந்து பிரித்து ராஜமுந்திரிக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் நடை பெறுவதாக தெரிகிறது. இதை தமிழ் நாட்டு மக்களும், அரசாங்கமும், ஊழி யர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார் கள்.

சென்னையில்  தாளமுத்து நடராசன்  கட்டிடத்தில் உள்ள இயற்கையோடு இயைந்த அலுவலகம் (Green Building) ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் பெரும் செலவு செய்து சொந்தமாக கட்டப்பட்டது. இவற்றில் சுமார் 600  நிரந்தர ஊழியர்களும், ஆயிரக்க ணக்கான துணை நிலை ஒப்பந்த ஊழி யர்களும் செயல்படுகிறார்கள். அண்ணா நகரில் பெரும் மூலதனத்தில்  உருவான ஊழியர் குடியிருப்பு உள்ளது. அதில் ஊழியர்களின் குடும்  பங்கள் வசித்து வருகின்றன. பல  ஆண்டுகாலமாக இங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிற இந்த ஊழியர்களி னுடைய எதிர்காலத்தைப் பற்றி கணக் கில் கொள்ளாமல் அதை மூடுவதன் மூலம் தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்  கக் கூடிய வேலைவாய்ப்புகள் பறி போகும் சூழல் ஏற்படும். புதிய  வேலைவாய்ப்புகளை உருவாக்கு வதற்கு பதிலாக இருக்கும் வேலை  வாய்ப்புகளை பறிக்கும் ஒன்றிய அர சின் இந்த நடவடிக்கை கடுமையான கண்டனத்திற்குரியது. எனவே, ஒன்றிய அரசின் எண்ணெய் வள அமைச்சகம் உடனடியாக தலை யிட்டு ஓ.என்.ஜி.சி.யின் கார்ப்பரேட் தலைமையகம் எடுத்திருக்கக் கூடிய  இந்த தவறான முயற்சியை கைவிடச்  செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.  தமிழ்நாட்டில் செயல்பட்டு வரக்  கூடிய இதுபோன்ற ஒரு முக்கியமான  அமைப்பை மூடுவது சரியல்ல. எனவே, மாநில அரசும் ஒன்றிய அரசை இது குறித்து வற்புறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கேட்டுக்  கொள்கிறது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.