tamilnadu

img

சூறாவளி காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம்

தஞ்சாவூர் மாவட்டத்தில், காவிரி சமவெளி பகுதிகளில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை மழையுடன் வீசிய சூறாவளி காற்றால், வடுகக்குடி, ஆசனூர், மரூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், சுமார் ரூ.25 லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் பாதிக்கப்பட்ட வாழை பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.