tamilnadu

img

திருவனந்தபுரம் 2022 ஜனவரி 14,15,16

தோழர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 23வது கட்சி மாநாட்டின் முன்னோடியாக திருவனந்தபுரம் மாவட்ட மாநாடு கேரளத்தின் தென்கோடியில் உள்ள பாறசாலாவில் தோழர் காட்டாக்கடை சசிநகரில் நடைபெறுகிறது. மாவட்ட மாநாட்டைச் சிறப்பிக்கும் வகையில், மாவட்டத்தில் கலாச்சார மாநாடுகள், கருத்தரங்குகள், கவிதை வாசிப்பு, கதைசொல்லல், வில்பாட்டு, களரி, கண்காட்சிகள், குழந்தைகளுக்கான அறிவியல் விழாக்கள், மெகா விழாக்கள், மத நல்லிணக்க பேரணிகள், பிரதிநிதிகள் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள், புத்தகத் திருவிழாக்கள் மற்றும் கண்காட்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
பாறசாலை, இடதுசாரி முற்போக்கு புரட்சிகர இயக்கத்திற்கு உத்வேகமூட்டிய, வலுப்படுத்திய பல தியாகங்கள் செய்து பெரும் போராட்டங்களை முன்னெடுத்த பூமியாகும்.

‘‘தங்களுடைய மார்பை மறைப்பதற்காக பெண்கள் 
சிந்திய இரத்தத்தில்
மூடிய கண்கள் திறந்து
கனல் பரவிய நாடல்லவா இது’’

கேரளத்தின் பெண்கள் முன்னெற்ற வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற மார்பு மறைக்கும் போராட்டம் நடந்தது இங்குதான். காணிபட் போராட்டம், வள்ளிச்சிற விவசாயப் பேராட்டம், நிலமீட்புப் பேராட்டம் உட்பட பல உரிமைப் போராட்டங்களுக்கு பாறசாலை சாட்சியாக உள்ளது.

இந்த தென்னாடு மறுமலர்ச்சி இயக்கத்தின் பிறப்பிடமாகவும், தைரியமான எதிர்ப்பு மற்றும் பன்மைத்துவத்தின் படிப்பினைகள் உள்ளது. வீரம் மிகுந்த பல்வேறு பேராட்டங்களுக்கு வடிவம் கொடுத்த கேரளத்தின் இத்தென் பகுதி மார்க்சிய இயக்கங்களின் பிறப்பிடமுமாகும்.

‘‘சுவாமிதோப்பில் வெங்கனூரில்
ஓடைக் கரையில்
தீர்த்தபாதரில் நாம் அனைவரும் 
கேட்டது ஒரே குரல் அல்லவா’’

சாதிவெறி மற்றும் கொடுங்கோன்மையின் இருண்ட கடந்த காலத்திலிருந்து மறுமலர்ச்சியின் புதிய கேரளத்திற்கு நம் நாட்டை
வழிநடத்திய சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் தேசபக்தியுள்ள
தேசபக்தர்களின் செயல் பூமியாக கேரளாவை மாற்றுவதில் இப்பகுதி முக்கிய பங்கு வகித்துள்ளது.

இடதுசாரி முற்போக்கு இயக்கங்களின் தலைமையில் இங்கு நடத்தப்பட்ட போராட்டங்கள் இந்நாட்டின் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. தலைநகர் மாவட்டத் தோழர்களுக்கு பெருமையுடன் சொல்ல நீண்ட
போராட்ட வரலாறு இருக்கிறது. நெய்யாற்றின்கரை துப்பாக்கிச் சூடு, கல்லறை பாங்கோடு போராட்டம், ஆற்றிங்கல் கலவரம், கண்டல கலவரம் போன்றவை அவற்றில் சில. இன்றும் பாசிசத்திற்கு எதிராக மக்களிடம் செயல்பட்டு வரும் சிபிஎம் கட்சிக்கு இந்த மாவட்டத்தில் பல இரத்த சாட்சிகள் உள்ளனர். தோழர் நாராயணன் நாயரும் தோழர் சஜின் ஷாஹுல் ஆகியேர் கேரளத் தென்னகத்தின் திழங்கும் நினைவுகளாக இருக்கிறது. 
வரலாற்று பூமியான பாறசாலையில் சிபிஎம் மாவட்ட மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறை. அதனால்தான் கடந்த சில நாட்களாக இரவு பகலாக உழைத்து வரும் கட்சித் தோழர்களும் ஆதரவாளர்களும் இந்நாட்டு மக்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மாநாட்டை முன்னிட்டு பல்வேறு மையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கம்யூனிஸ்ட் கட்சியையும், தொழிலாளர் இயக்கத்தையும் வலுப்படுத்துவதில் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய தோழர் எம்.சத்தியநேசன், தோழர் ஆர்.பரமேஸ்வரன் பிள்ளை உள்ளிட்ட பல துணிச்சலான தோழர்களின் நினைவேந்தல் இங்கு எதிரொலிக்கிறது. சமகாலப் பிரச்சனைகளில் வலுவாகத் தலையிட்டு அரசியல் நிலைப்பாட்டில் இருந்து இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான தலையீடுகளை இந்தக் காலகட்டம் எதிர்நோக்குகிறது. 
இப்பகுதி மக்கள் எப்போதும் இடதுசாரி இயக்கங்களில் இணைந்து நிற்பவர்களாவார்கள். மாவட்டத்தில் சிபிஐ(எம்) மிகவும் பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த அரசியல் இயக்கமாக வளர்ந்துள்ளது. முந்தைய தேர்தல் முடிவுகள் அனைத்தும் அதற்குச் சான்றாகும்.

இந்த மாவட்ட மாநாட்டில் போராட்ட அனுபவமுள்ள தோழர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க பாறசாலையின் சிவப்பு மண்ணுக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.