பள்ளிபாளையம் வேலுச்சாமி கொலை வழக்கில் சிறப்பாக வாதாடி நல்ல தீர்ப்பை பெற்றுத் தந்த அரசு சிறப்பு வழக்கறிஞர் திருமலை ராஜனை சிபிஎம் தலைவர்கள் மாலை அணிவித்து பாராட்டினர். அப்போது வழக்கறிஞர் திருமலைராஜன் சமூகத்தில் கடைக் கோடியில் உள்ள அப்பாவி மக்களுக்கும் இத்தகைய தீர்ப்பு ஒரு உந்து சக்தியாக அமைவதோடு, சமூகவிரோதிகளுக்கு எச்சரிக்கையாக அமையும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த தீர்ப்பு சாமானிய மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் தீர்ப்பாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.