ஈரோட்டில் அரசியல் சாசன தினம் மற்றும் தில்லி விவசாயிகள் எழுச்சியின் மூன்றாம் ஆண்டு தின சிறப்புக் கருத்தரங்கம், தொழிலாளர் - விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர் மற்றும் சிறுதொழில் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது. ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, சிறப்புரை நிகழ்த்தினார். விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு, காப்பீட்டு ஊழியர் சங்க அகில இந்திய இணைச் செயலாளர் எம்.கிரிஜா ஆகியோர் கருத்துரையாற்றினர். ஏ.முனுசாமி, கே.மாரப்பன், ஆர்.ரகுராமன், எஸ்.சுப்பிரமணியன், எஸ்.மாரிமுத்து, கே.விஜயராகவன், சண்முகவள்ளி, விஜய மனோகரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.