tamilnadu

img

இவர்களன்றோ தேசத் துரோகிகள்! -

சாமியார்களின் நாடாளு மன்றம் என்ற பெயரில் ஹரித்வாரில் டிசம்பர் 17-19 தேதிகளில் நடைபெற்ற நிகழ்வில் முஸ்லீம்களைத் தாக்கி, ஒட்டுமொத்தமாகக் கொலை செய்து அவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வெறுப்பை உமிழ்ந்து இரு வாரங்களுக்கு மேலாகியும் இதுவரை எவரும் கைது செய்யப்பட வில்லை. முதலாவதாகப் பதிவு செய்யப் பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் ஒரு வரின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டி ருந்தது. அவரும் யார் என்றால், முஸ்லீம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறிய வராவார். பின்னர், மற்றொரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த யதி நரசிங்கானந்த் உட்பட நால்வரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. 

பகிரங்கமான கொலைவெறி

ஜனவரி 1 அன்று உத்தரகண்ட் காவல்துறை இது தொடர்பாகப் புலன் விசாரணை மேற்கொள்வதற்காக ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப் பட்டிருப்பதாக அறிவித்திருந்தது. இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரியிடம் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கிய நபர்கள் கைது செய்யப்படுவார்களா எனக் கேட்டபோது, அவர் புலன்விசாரணையின்போது உருப்ப டியான சாட்சியம் எதுவும் காணப்பட்டால் பின் கைதுகள் மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிவித்துள்ளார். 

முஸ்லீம்களை ஒட்டுமொத்தமாகக் கொலை செய்திட வேண்டும் என்று மத வெறிச் சாமியார்கள்  பேசியது தொடர்பாக ஏராளமான சாட்சியங்கள் சமூக வலைத் தளங்களில் வலம் வந்து கொண்டிருக் கின்றன. அந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப் பப்பட்டது, அந்த சமயத்தில் ‘சாமியார்கள்’ என்ற பெயரிலான மதவெறியர்கள் கக்கிய வெறுப்பு உரைகள் விரிவான அளவில் சுற்றுக்கு விடப்பட்டிருக்கின்றன. அங்கே பேசிய அனைவருமே ஆயுதங்களை ஏந்த  வேண்டும் என்றும், முஸ்லீம்களைக் கூண் டோடு கொலை செய்திட வேண்டும் என்றும், அவர்கள் குடியிருக்கும் கிராமங்களை பூண்டோடு அழித்திட வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்கள். ஒரு நபர், தனக்கு வாய்ப்பு கிடைத்தால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைக்கூட துப்பாக்கியால் சுட்டுக் கொல்வேன் என்று கொக்கரித்தார்.

சாட்சியங்களைத் தேடுகிறார்களாம்!

இவர்களின் பேச்சுக்கள் “வெறுப்பு உரைகள்” என்பதாக மட்டும் அமைந்திட வில்லை. மாறாக, அவை முஸ்லீம்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்திட வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று வெளிப்படையாகவே தூண்டும் விதத்தில்  அமைந்தவையும் ஆகும்.ஆனாலும், உத்தரகண்ட் காவல் துறை இன்னமும் இந்த மதவெறியர்க ளின் பேச்சுகளுக்கு எதிராக வலுவான சாட்சி யங்களைத் தேடிக் கொண்டிருக்கிறதாம். இவர்கள் பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 153-ஏ பிரிவு மட்டுமே குறிப்பி டப்பட்டிருக்கிறது. அதாவது அவர்கள் மதத்தின் அடிப்படையில் இரு குழுக்க ளுக்கு இடையே வெறுப்பு உணர்வை அல்லது குரோதத்தை அல்லது ஒற்றுமை யின்மையைத் தூண்டும் விதத்தில் நடந்துகொண்ட குற்றத்தை மட்டும் குறிக்கி றது. ஆனால், இவர்கள் புரிந்துள்ள குற்றம் மிகவும் அதிகமானவைகளாகும்.

‘சாமியார்கள் நாடாளுமன்றத்தை’ நடத்தியவர்களோ, அதில் பங்கேற்ற வர்களோ தங்கள் மீது முதல் தகவல் அறிக் கைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதுபற்றி, கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரிய வில்லை. இந்த நிகழ்வு நடைபெற்றதற்கு ஒருவாரம் கழித்து, டிசம்பர் 28 அன்று, பல மடாலயங்களைச் சேர்ந்த சாமியார் களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் 21 சாமியார்களைக் கொண்ட ‘மையக் குழு’  (core committee) ஒன்று ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. ‘சாமியார்கள் நாடாளுமன் றத்தை’ நடத்திய நரசிங்கானந்த் மற்றும் ஐந்து பேர் இதில் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமுக்கு எதிரான தங்கள் போராட்டத்தைத் தொடர்வது எனத் தீர்மா னித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் குரானுக்கு எதிராகவும், நகரில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் முஸ்லீம் மௌ லானாக்கள் மற்றும் இமாம்களில் பலருக்கு எதிராகவும் ஹரித்வார் கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யும் அளவுக்கும் சென்றிருக்கிறார்கள்.

‘சாமியார்கள் நாடாளுமன்றம்’ என்பது இந்தியாவை “இந்து ராஷ்டிரமாக” மாற்று வதற்கான திசைவழியில் ஓர் அடி எடுத்து வைத்திருப்பதாகவே அவர்கள் கூறு கிறார்கள். மேலும் அவர்கள், இஸ்லாமுக்கு எதிராகப் போராட அறைகூவல் விடுத்தி ருப்பதுடன் மடாலயங்கள் இந்து தர்மத்தைப் பாதுகாப்பதற்காக ஆயுதந்தாங்கிய குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்ப தற்கான மையங்களாகவும் இருந்திடும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

இது தேசத்துரோகக் குற்றம்

நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின்படி, இவ்வாறு அழைப்பு விடுப்பதும், வன் முறையைத் தூண்டுவதும் தேசத்துரோகக் குற்றம் என்பது உச்சநீதிமன்றத்தின் தேசத்துரோகக் குற்றப்பிரிவு குறித்து அளித்துள்ள தீர்ப்பின்மூலம் தெளிவான ஒன்றாகும். மேற்படி ஹரித்வார் சம்பவம் சில விஷ யங்களைத் தெளிவுபடுத்தி இருக்கிறது. முஸ்லீம்களுக்கு எதிராகப் பேசியதுடன், அவர்களை அழித்து ஒழித்திட வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்த, காவி உடை தரித்த ஆண்களும், பெண்களும் ஏனோதானோ பேர்வழிகள் அல்ல. அவர்கள் அனைவ ருமே ஆர்எஸ்எஸ்/பாஜக உட்பட இந்துத் துவா அமைப்புகளின் மிக முக்கியமான நபர்களாவார்கள். அவர்களுக்கு அரசின் ஆதரவும் அரவணைப்பும் இருந்து வருவது  தெளிவாகவே தெரிகிறது. இதனை, உத்தர கண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, சாமியார்கள் நாடாளுமன்றத்தை நடத்திய ஸ்வாமி பிரபோதானந்த் என்பவரின் கால்க ளில் விழுந்து வணங்கியதிலிருந்தே நன்கு அறிந்துகொள்ள முடியும்.

ஹரித்வார் நிகழ்வு, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களைச் சேர்ந்த தலைவர்க ளின் மதவெறிப் பேச்சுக்களின் ஒரு பகுதி யேயாகும். இப்போது இது அதிகமாகி இருக்கிறது. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முஸ்லீம்களுக்கு  எதிராக விடாமல் குரைத்துக்கொண்டி ருப்பதும்,பாஜக நாடாளுமன்ற உறுப்பி னரான தேஜஸ்வி சூர்யா சமீபத்தில் மடால யங்களையும், கோவில்களையும் இஸ்லா முக்கும், கிறித்தவத்திற்கும் மதம் மாறிய வர்களை மீண்டும் இந்துமதத்திற்குக் கொண்டுவருவதற்கான இடங்களாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசியிருப்பதும் இவற்றின் தொடர்ச்சியேயா கும். இவை, முஸ்லீம்களுக்கு எதிரான “வெறுப்புப் பேச்சுக்கள்” மட்டுமல்ல. இவற்றின் அடிப்படையில் நாள்தோறும் நாட்டின் பல பகுதிகளில் முஸ்லீம்களுக்கு எதிராகவும், கிறித்தவர்களுக்கு எதிராக வும் நேரடியாகவே வன்முறைத் தாக்கு தல்களில் ஈடுபடுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சாலையோர வியாபாரிக ளாக உள்ள முஸ்லீம்கள், ஊர் ஊராகச் சென்று பொருள் விற்பனை செய்யும் முஸ் லீம்கள், ஆட்டோ-ரிக்சா ஓட்டும் முஸ்லீம்கள் வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாவ தும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

கர்நாடக மாநிலத்தில் கிறித்தவர்கள் தாக்கப்படுவதும், அவர்களின் தேவால யங்கள் தாக்கப்படுவதும் நாளும் நடை பெறும் நிகழ்வுகளாக மாறிக்கொண்டி ருக்கிறது.

மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள்  உணர வேண்டும்

பஜ்ரங் தளம், விசுவ இந்து பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின்கீழ் இயங்கும் இதர பிரிவுகள் பல, சாமியார்கள் நாடாளுமன்றத்தை நடத்திய ‘சாதுக்கள்’ மற்றும் பல்வேறு மாநிலங்களில் பாஜக -வின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள் – இவர்கள் அனைவருமே இந்துத் துவா சேனையின் பல அங்கங்களாவார் கள். இவர்கள் அனைவருமே அரசமைப்புச் சட்டத்தை சீர்குலைத்திடும் நடவடிக்கைகளி லும், தாங்கள் ஆளும் மாநிலங்களில் இந்து ராஷ்டிரத்தை அமல்படுத்துவதற்கான வேலைகளில் வெறித்தனமாக ஈடுபட்டுக் கொண்டுமிருக்கிறார்கள்.       

இந்துத்துவா பாசிஸ்ட்டுகள் நாட்டிற்கு ஆபத்தாக இராட்சதத்தன்மையுடன் வளர்ந்து கொண்டிருப்பதை, நாட்டிலுள்ள மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளில் சில இன்ன மும் சரியானமுறையில் புரிந்துகொள்ளா மல் இருப்பது வருத்தத்திற்குரியதாகும். பாசிஸ்ட்டுகளின் வெறித்தனமான நடவ டிக்கைகளுக்கு எதிராக சிலர் அறிக்கை  விடுவதுடன் தங்கள் வேலையை முடித்துக் கொள்கிறார்கள். உத்தரப்பிரதேசத்திலும் உத்தரகண்டிலும் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெறுவதையொட்டி இதை ஒரு பிரச்சனையாக பார்க்காமல் தவிர்க்க வே அவர்கள் விரும்புகிறார்கள். இன்றைய நிலையில் பாசிஸ்ட்டுகளின் நடவடிக்கை களுக்கு எதிராக வெறுமனே கண்டனத் தீர்மானங்கள் மட்டும் போதுமானதல்ல. இவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக அனைவரின் ஒன்றுபட்ட நடவடிக்கையும் அவசியத் தேவையாகும். பாஜக ஆளும் மாநிலங்களில் பாசிஸ்ட் இந்துத்துவா அமைப்புகள் வெறித்தனமான நடவடிக்கை களில் ஈடுபடும்போது, இவர்களின் வெறித் தனமான நடவடிக்கைகளை, ஒன்றுபட்டு எதிர்த்து முறியடித்திட வேண்டியது,  அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

ஜனவரி 05, 2022, 
தமிழில்: ச.வீரமணி