சென்னை, ஜூலை 28- சமூக பொறுப்பு நிதி (சி.எஸ்.ஆர் ஃபண்ட்) முறையாக பயன்படுத்தப்பட வில்லை என்ற ஆளுந ரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பில் ரஷ்ய விண்வெளி ஏவுதளம் பயண பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், “பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சி.எஸ்.ஆர் ஃபண்ட் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற ஆளுநரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. சி.எஸ்.ஆர் ஃபண்ட் மூலம் நமக்கு ரூ.100 கோடி கிடைத்துள்ளது ஒன்றிய அரசின் நிதி திட்டங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு முறையாக பயன்படுத்தி வருகிறது” என்றார்.