மதுரை, ஆக. 10- ஆண்டு தோறும் ஜூன் மாதம் கடைசி தேதிக்குள் கலைமாமணி உள்ளிட்ட விருது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டார். திருநெல்வேலியை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் மாரியப்பன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய் யப்பட வேண்டும். ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு தமி ழக முதல்வர் வெளியிட்ட அரசாணையில் தேர்தல் முறை மாற்றப்பட்டு 22 பேர் நியமனம் செய்யப் பட்டனர் . இந்த நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியாக, நியமனம் செய்யப்பட்ட 22 பேரும் எந்த வித கொள்கை முடிவும் எடுக்கக் கூடாது என்று நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது . இந்த வழக்கில் வெள்ளியன்று நீதிபதி சுரேஷ் குமார் அளித்த தீர்ப்பில், வருகிற 13 ஆம் தேதி தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற உள்ள கலைமாமணி விருது வழங்கும் விழாவிற்கு எந்த தடையும் இல்லை. விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கோவிந்தராஜ் என்பவருக்கு மட்டும் விருது வழங்க தடை விதிக்கப்படுகிறது. 1995ஆம் ஆண்டிலேயே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 ஆம் தேதிக்குள்ளாக விருதுக்கான தேர்வு முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை முறையாக மேற்கொண்டாலே, ஒரு விருதுக்கு 100-க்கும் மேற்பட்ட கலைஞர்களை பரிசீலிப்பது தவிர்க்கப்ப டும். சிரமும் குறையும். ஆகவே, இனி வரும் காலங்க ளில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் கடைசி தேதிக்குள் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அனைத்து கலைஞர்களிடம் விண்ணப் பம் பெற்று வெளிப்படை தன்மையுடன் பரிசீலித்து, விருதுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தர விட்டார்.