tamilnadu

img

தீக்கதிர் நெல்லைப் பதிப்பு உதயமாகிறது...

தீக்கதிர் நாளிதழின் திருநெல்வேலி பதிப்பு விரைவில் துவங்குகிறது. இதற்கான தயாரிப்புக் கூட்டம் திருநெல்வேலியில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி, ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.செல்லசுவாமி (கன்னியாகுமரி), க.ஸ்ரீராம் (திருநெல்வேலி), கே.பி.ஆறுமுகம் (தூத்துக்குடி), உ.முத்துப்பாண்டியன் (தென்காசி), மதுரைப் பதிப்பு பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன் உள்ளிட்டோர் பேசினர். மாநிலக் குழு உறுப்பினர்கள் பி.கற்பகம், பி.பூமயில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.