நேர்மை துணிச்சலுடன் செய்தி களை மக்களுக்கு எடுத்துச் செல்வதில் அரிய பங்காற்றி வரும் தீக்கதிர் நாளிதழ் ஐந்தாவது பதிப்பாக நெல்லையில் தனது இதழியல் பயணத்தை தொடங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. அறிவுசார் மக்கள் அதிகம் இருக்கும் பகுதி யில் தான் ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்ற நிலை யினை உருவாக்க முடியும். தீக்கதிர் நாளிதழின் தீவிர வாசகர்களில் நானும் ஒருவன். தமிழக அச்சு ஊடகத்தில் உழைக்கும் மக்களின் பேராதர வைப் பெற்ற தீக்கதிர் நேர்மை, துணிச்சலுடன் செய்திகளை மக்களுக்கு எடுத்து செல்வதில் அரிய பங்காற்றி வருகிறது. நம் தமிழ்ச் சமூகத்தின் சாளரமாக, உண்மையின் உரை கல்லாக அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பை பெற்ற நாளிதழ் தீக்கதிர். வார இதழாக தொடங்கப்பட்டு பின்னர் நாளிதழாக மாற்றம் பெற்ற தீக்கதிர் கடந்து வந்த பாதை கரடு முரடானது. நல்லதை நாடுவதும் அல்லது சாடுவதும் தீக்கதிர் கட்டுரைகளின் பிரதான நோக்கமாக இருந்து வந்திருக்கிறது. பொன் விழாவைக் கண்ட தீக்கதிர், நூற்றாண்டு விழாவைக் கடந்து தனது பயணத்தை தொடர வேண்டும். திருநெல்வேலியில் புதிய பதிப்பை சிறப்புடனும் எழுச்சியுட னும் தொடங்கும் தீக்கதிர் மேலும் சிறக்கட்டும். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.