மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கத்திற்கான பேரவைக் கூட்டம் கிண்டியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தீக்கதிர் தலைமை பொதுமேலாளர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமனிடம் 156 தீக்கதிர் சந்தா, 23 மார்க்சிஸ்ட் சந்தா, 27 செம்மலர் சந்தா ஒப்படைக்கப்பட்டது. அருகில் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், சி.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.