திக்கெட்டும் அறிவொளி பரப்பும் தீக்கதிர் நாளேடு 60 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி இளம் தலைமுறையின் கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்க்கும் விதத்தில் நடைபோட உறுதியேற்றுள்ளது. தலைநகர் சென்னையில் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா முதல் கடைக்கோடி எல்லையில் ஆற்றிங்கல்லின் குழந்தை ஏ.எஸ்.ஸ்ரீபத்ரா வரை மக்கள் கரங்களில் தீக்கதிர் நாளிதழ் தவழ்கிறது. வாசகப் பரப்பை மேலும் விரிவுபடுத்த இந்த வாசிப்பு உத்வேகமளிக்கிறது.