கண்ணூர், ஜன.19- கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியையும், இடதுசாரி இயக்கத்தையும் உலகம் முழுவதும் உள்ள முற்போக்கு சக்திகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. கேரளாவிடம் இருந்து உலகம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. முதலாளித்துவ ஜனநாயகம் பின்னடைவை சந்திக்கும் போது, அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். ஆனால், கேரளாவில் நிலைமை வேறாக உள்ளது என்று எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை கூறினார். கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 23 ஆவது அகில இந்திய மாநாடு வரவேற்புக்குழு அமைக்கும் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை பேசுகையில், கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் நாட்டின் பொரு ளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாச்சார வாழ்க்கையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. கேரளாவில் தற்போது ஏற்பட்ட ஆட்சித் தொடர்ச்சியின் அடிப்படையும் மக்களுக்கான மாற்றை முன்னிறுத்துவதாகும்.
நிலையான வளர்ச்சி குறியீட்டில் கேரளா முத லிடத்தில் உள்ளது. இந்தச் சாதனை மேலும் உன்னத நிலையை அடைய வேண்டும். இதற்கு நம்முன்னால் முன்மாதிரி ஏதும் இல்லை. முன்மாதிரியாக நாம் மட்டுமே இருக்கிறோம். வரலாற்றில் மிக முக்கியமான அகில இந்திய கட்சி மாநாடு கண்ணூரில் நடைபெற உள்ளது. முதலாளித்துவம் ஒட்டு மொத்தமாக தோல்வியடைந்துள்ளன. இவ்வளவு பெரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், முத லாளித்துவ நாடுகளால் மக்கள் பிரச்சனை களை தீர்க்க முடியவில்லை. கோவிட்டி லிருந்து மக்களை பாதுகாப்பதில்கூட தோல்வி யடைந்துள்ளது. நாட்டில் மோடி ஆட்சியை தோற்கடிப்பது முக்கியமான பணி. இதற்கு இடது சாரி இயக்கம் வலுப்பெற வேண்டும். பல்வேறு மாநிலங்களில் பிரதேச அளவிலான சக்திகள் வலுப்பெற்று வருகின்றன. அவர்கள் மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். இது போன்ற சக்திகளை ஒன்றிணைத்து மோடி அரசை தோற்கடிக்க வேண்டும் என்றுகூறினார்.
கம்யூனிஸ்ட் எதிர்ப்பு பிரச்சாரம் துருப்பிடித்த ஆயுதம் : கொடியேரி பாலகிருஷ்ணன்
கம்யூனிஸ்டுகளுக்கு தேசபக்தி இல்லை என்ற பழைய பிரச்சாரத்தையே சில அமைப்பு கள் மீண்டும் செய்கின்றன. கட்சியின் அமைப்பு விதிகளை ஏற்றுக் கொண்டு கட்சிக்கு வரும் உறுப்பினர்கள் தெரிவிக்கும் உறுதிப்பாடு, தொழிலாளி வர்க்கத்தையும் இந்திய நாட்டை யும் முழு மனதுடன் நேசிப்பதாகும். அப்படிப்பட்ட கட்சியைத்தான் தேசபக்தி இல்லை என்று பிரச்சா ரம் செய்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கும் கொள்கை அணுகுமுறைகள் நாடு முழுவதும் கவனிக்கப்பட்டு வருகின்றன, மேலும் இந்தக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மக்கள் கட்சிக்கு அதிகமாக வருகிறார்கள் என்றார்.