அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு சிவகங்கை, மார்ச் 6- சிவகங்கை மாவட்டத்தை வளமான மாவட்டமாக உருவாக்கும் திட்டம்தான் நீர்வள ஆதார துறை திட்டம் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப் பன் திட்டத்தை துவக்கி வைத்து பேசி னார். மானாமதுரை கீழப்பசலை கால்வாய் தடுப்பணை ரூ.16.86 கோடியில் கட்டப்படு கின்றன. இதனை அமைச்சர் பெரியகருப் பன் தொடங்கி வைத்தார். விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி தலைமை வகித்து பேசினார். செயற்பொறி யாளர் பாரதிதாசன் வரவேற்று பேசினார். ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, மானா மதுரை நகர்மன்ற 14வது வார்டு உறுப்பினர் சதீஷ், மானாமதுரை சட்டமன்ற உறுப்பி னர் தமிழரசி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, மானா மதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் பேசினர். இதில் சிவகங்கை நகர் மன்ற தலை வர் துரை ஆனந்த், திருப்புவனம் பேரூ ராட்சி தலைவர் சேங்கைமாறன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், சிவகங்கையை வளமான மாவட்டமாக மாற்றுவதற்கு உரிய நடவ டிக்கையாக தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. விரகனூர் அணையிலிருந்து இடது வலது பிரதான கால்வாயில் கால் வாய்களை மேம்படுத்திட ரூ.40 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மானாமதுரை கீழ பசலை மற்றும் நான்கு கிராம கண்மாய்கள் பயன்பெறும் திட்டமாக ரூ.16.86 கோடி திட்டத்தில் வைகை ஆற்றில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. இந்த அணைக்கட்டு மூலமாக கீழ பசலை, மேலப்பசலை, ஆதனூர், சங்கமங்கலம் ஆகிய நான்கு கிராமங்களின் கண்மாய்கள் வழியாக 1352.50 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற உள்ளன. கிராமங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இதனால் பாசன வசதி பெற்று விவசாயிகளின் பொரு ளாதார வாழ்க்கைத் தரம் மேம்படும். மக்க ளுக்கான குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த வும் வழிவகை ஏற்படும் மேலும் வெள்ள காலங்களில் வைகை ஆற்றில் இருந்து உபரி வெள்ள நீரை கண்மாய் வழியாக மேலப் பசலை கண்மாய் வழியாக நாட்டார் கால் வாய்த் திட்டத்தின் மூலம் பயன்பெறும் என்று தெரிவித்தார். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமி ழரசி பேசும்போது, மானாமதுரையில் விரை வில் அரசு கலைக்கல்லூரி, ஐடிஐ தொடங் கப்படும் என்று தெரிவித்தார்.