சென்னை, மே 4- தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திய பின் முதுகலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரி யர் கழகம் சார்பில் பள்ளிக் கல்விதுறை இயக்ககம் (டிபிஐ) வளாகத்தில் வியாழ னன்று (மே 4) காத்திருப் புப் போராட்டம் துவங்கி யது. மாநிலத் தலைவர் இரா. பெருமாள்சாமி தலைமை தாங்கினார். பொதுச்செய லாளர் சே.பிரபாகரன், பொருளாளர் பொ.அன்பழ கன், மாநில மகளிர் பிரிவு செயலாளர் சி.லலிதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதுகுறித்து இரா.பெரு மாள்சாமி செய்தியாளர் களிடம் கூறியதாவது: மே மாதம் 8ஆம் தேதி முதல் ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள் ளது. எப்போதும் ஆசிரியர் களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திய பின்தான் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். ஆனால் தற்போது பள்ளி கல்வித்துறையால் அறி விக்கப்பட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் மேல் நிலைப் பள்ளி தலைமையா சிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்ற வழக்கை காரணமாக காட்டி தற்போது நடத்த இயலாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள 600க்கும் மேற்பட்ட மேல் நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணி யிடம் காலியாக உள்ளதால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடு வெகுவாக பாதிக்கிறது. எனவே ஆசிரியர் மற்றும் மாணவர் நலன் கருதி உடன டியாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி யிடத்திற்கான கலந் தாய்வை நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தும் பட்சத் தில் சுமார் 600 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடம் பொது மாறுதல் கலந்தாய் வில் காட்டப்படும். இதனால் அதிகப்படி யான ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு பயனடை வர். தேசிய கல்விக் கொள் கையில் உள்ள பதவி உயர் வுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டதால், கடந்த 2022 ஜனவரி மாதம் வழங்கப்பட்ட தலைமை யாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் சுமார் 400க்கும் மேற்பட்ட முது கலை ஆசிரியர்கள் கொரோனா காலத்தில் அந்த தேர்வை எழுத முடிய வில்லை. இதனால் அந்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற இயலவில்லை. அவர் கள் அனைவரும் வரும் மே மாதம் அல்லது அடுத்த கல்வியாண்டில் ஓய்வு பெற உள்ளனர்.
முதுகலை ஆசிரியர் களின் பணிக்காலத்தில் உள்ள ஒரே ஒரு பதவி உயர்வு தலைமை ஆசிரியர் பணி யிடம் மட்டுமே. கடந்த ஓரா ண்டு காலமாக தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மறுக்கப்படுவதால் பல முதுகலை ஆசிரியர்கள் தன்னுடைய பணி காலத்தில் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறும் அவல நிலை உள்ளது. எனவே உடனடியாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்திய பின் முதுகலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். 2018, 2019, 2020ஆம் ஆண்டுக ளில் பணி நிரவல் காரணமாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்க ளுக்கு தற்போது நடை பெறவுள்ள கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.