tamilnadu

img

சிறுமியை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து பாலியல் வன்முறை பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை

சேலம், நவ.16- பெரம்பலூர் அருகே சிறுமியை கடத்தி, கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்முறை செய்ததால்  மனமுடைந்த 17 வயது சிறுமி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். சிறுமியின் மரணத் திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர் கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் போராட்டத்தில் ஈடு பட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண் டன் என்பவர் கடத்திச்சென்று, திரு மணம் செய்து, பாலியல் தொந்தரவு கொடுத்து, அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக காவல் நிலை யத்தில் பெற்றோர் புகார் அளித்த தன் அடிப்படையில், காவல் துறை யினர் சிறுமியை மீட்டு பெற்றோரி டம் ஒப்படைத்தனர். இந்நிலையில், மீட்கப்பட்ட சிறுமியை மணிகண்ட னின் தந்தை மற்றும் அவரது உற வினர் ஆகியோர் மிரட்டியதாக பெற்  றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் மணிகண்டனின் தந்தை மற்றும் அவ ரது உறவினர் இருவரையும் கை களத்தூர் காவல் துறையினர் கைது செய்தனர். இதனிடையே மனமுடைந்த சிறுமி கடந்த நவம்பர் 3 ஆம் தேதி யன்று விஷமருந்தி தற்கொலைக்கு  முயன்றார். இதனால் அதிர்ச்சி யடைந்த பெற்றோர்கள் சிறுமியை மீட்டு, சேலம் மாவட்டம், வீரகனூர்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதன்பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதனன்று சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல றிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினரின் தலைமையில், சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனை முன்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சிறுமியின் பெற்  றோர் கூறுகையில், எனது மகளை  கட்டாயப்படுத்தி பாலியல் வன்  கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார். இத னால் மனவேதனை அடைந்த எனது மகள் விஷமருந்தி தற்கொலை செய்து  கொண்டார். என் மகள் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் அது வரை இறந்த என் மகளின் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்த னர். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்  டச் செயலாளர் மேவை.சண்முக ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.குணசேகரன், ஐ.ஞான சௌந்தரி, மேற்கு மாநகரச் செயலா ளர் எம்.கனகராஜ், மாதர் சங்க மாவட்  டச் செயலாளர் எஸ்.எம்.தேவி,  சிபிஎம் பெரம்பலூர் மாவட்டச் செய லாளர் பி.ரமேஷ், வேப்பந்தட்டை ஒன்றியச் செயலாளர் ஆர்.கோகுல கிருஷ்ணன், வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் சக்திவேல், மாதர்  சங்க மாவட்டத் தலைவர் மகேஸ் வரி, மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் ராமு, விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் ஏ.கே.ராஜேந்  திரன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.