tamilnadu

img

நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் 2-ஆவது சுதந்திரப் போர் போன்றது

திண்டுக்கல், மார்ச் 21- திண்டுக்கல் நாடாளு மன்ற தொகுதியில் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்தை அறி முகம் செய்து வைக்கும் செயல்வீரர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் நடை பெற்றது.  கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ‘‘இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளராக ஆர். சச்சிதானந்தத்தை அளித்த தற்கு தமிழக முதல்வருக்கு நன்றி.  ‘இந்தியா’ கூட்டணி மகத் தான கூட்டணி. இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் 40 தொகுதியிலும் வெல்லும். மக்கள் நம்முடன் இருக்கி றார்கள். உழைப்பா? பணமா? என்றுக் கேட்டால் உழைப்பு தான் முக்கியம். அந்த உழைப்பால்தான் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராக கே.பால பாரதி மூன்று முறை தேர்ந் தெடுக்கப்பட்டு பதவி வகித் தார். அதேபோல், திண்டுக் கல்லில் இருந்து மாவட்டம் முழுவதும் பணி செய்ய நமது வெற்றி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் காத்தி ருக்கிறார்.  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 5.36 லட்சம் வாக்கு கள் வித்தியாசத்தில் வெற் றிப் பெற்றோம். இந்த தேர்த லிலும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு லட்சம் வாக்குகள் வீதம் வாங்க தொண்டர்கள் தீவிரமாக உழைக்க வேண்டும். நம் வெற்றிச் சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம். தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்குமா என்று தெரியவில்லை. தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாவது சுதந்திர போர் போன்றது. எனவே, மக்களிடம் யாரு க்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண் டும்’’ என்று அழைப்பு விடுத்தார்.

மார்ச் 24- உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

இக்கூட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், ‘‘திமுக தலை மையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் வேட்பா ளர்களை அறிவித்து உடனடி யாக தேர்தல் பணியை தொடங்கி உள்ளோம். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அனைத்து திட்டங் களையும் நாம் பெற முடியும். அதிகமான வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய அரிவாள் சுத்தி யல் நட்சத்திரம் சின்னத்தை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் மார்ச் 24 அன்று திண் டுக்கல், நத்தத்தில் நடை பெறும் கூட்டங்களில் கலந்து கொண்டு பிரச்சா ரத்தில் ஈடுபட உள்ளார்’’ என்றார்.

ஊண் உறக்கமின்றி உழைப்போம்!

பழனி எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமார் பேசுகை யில், ‘‘இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பெற்ற தொகுதி ஆத்தூர் தொகுதி. தமிழ்நாட்டில் முதல் நப ராக நமது வேட்பாளர் ஆர். சச்சிதானந்தம் பிரச்சாரத் தில் ஈடுபட உள்ளார். எனவே, தொண்டர்கள் அனைவரும் வரும் 20 நாட்களில் ஊண்,  உறக்கமின்றி உழைத்து ‘இந்தியா’ கூட்டணி வேட்பா ளர் ஆர்.சச்சிதானந்தத்தை 8 லட்சம் வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்’’ என்றார்.