tamilnadu

img

மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு தர வேண்டும்!

மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு தர வேண்டும்!

‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

புதுதில்லி, மே 24 - “தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் வளர்ச்சி இலக்குகளை அடை வதற்கு, ஒன்றிய அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று ‘நிதி  ஆயோக்’ கூட்டத்தில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். 2047-ஆம் ஆண்டுக்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்றும், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்று  பிரதமர் நரேந்திர மோடி கூறும் நிலை யில், அதற்கு “கூட்டுறவு கூட்டாட்சி என்பது  அவசியமான அடித்தளம்” என்று குறிப் பிட்டார். “மாநிலங்கள் மக்களுடன் நேரடி யாக இணைந்திருப்பதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மாநிலங் களே தீவிர பங்கு வகிக்கின்றன” என்று  பிரதமர் மோடியே முன்பு பேசியிருந்ததை யும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். நிதி ஆயோக் அமைப்பின் 9-ஆவது  நிர்வாகக்குழு கூட்டம், தில்லியில் பிரதமர்  நரேந்திர மோடி தலைமையில் சனிக் கிழமை (மே 24) காலை 9 மணிக்கு பாரத்  மண்டபத்தில் நடைபெற்றது. பல்வேறு மாநில முதல்வர்கள் - அரசுத்துறை செய லர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், தமிழ்நாடு சார்பில் முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் கலந்து கொண்டு, தமிழ்நாட் டின் கோரிக்கைகளை முன்வைத்து உரை யாற்றினார்.

கல்விக்கான நிதியை மறுக்கும் ஒன்றிய அரசு

அப்போது பேசிய அவர், “பிஎம்ஸ்ரீ  திட்டம் தொடர்பான கல்வி அமைச்சகத்து டனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், எஸ்எஸ்ஏ நிதி மறுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், 2024-2025-ஆம்  ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய்  ஒன்றிய அரசின் நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது” என்று புகார் தெரி வித்தார். மேலும், நிதியை மறுப்பது, அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற் றும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கிறது என்பதால் தாமதமின்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலி யுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்கு மாறு ஒன்றிய அரசை வலியுறுத்திக்  கேட்டுக் கொண்டார்.

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு குறைப்பு

15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரை கள் படி மாநிலங்களுக்கு வரி வரு வாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்  தினாலும், நடைமுறையில் இது பின் பற்றப்படவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.  பரிந்துரைக்கு மாறாக, கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசும் - மாநில அரசுகளும் இணைந்து செயல் படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத்தொகை, தொடர்ந்து உயர்ந்து வருவதும், தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி நிலையை மேலும் பாதிக்கின்றது என்று கூறினார். மேலும், ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடாக உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும் என்று கூறினார்.

வலிமையான இந்தியாவுக்கு  எப்போதும் துணை நிற்கும்

“அனைத்து மக்களும் வளமுடன் வாழ்ந்திடும் வகையில், அனைத்து பண்பாடுகளும் செழித்திடும் வகையில்,  பன்முகத்தன்மை கொண்ட வலிமை யான நாடாக இந்தியா திகழ்ந்திட, தமிழ்  நாடு தனது சிறந்த பங்களிப்பை என்றும்  வழங்கிடும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அதேநேரம், “மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய, தரப்பட வேண்டிய நிதியானது எப்போதும் போராடி – வாதாடி - வழக்குப் போட்டு பெற வேண்டிய நிலைமையில் இருப்பது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழ கல்ல” என்றும் தெரிவித்தார். “இது மாநி லத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும்; இந்தி யாவின் வளர்ச்சியையும் பாதிக்கும்” என்று கூறினார். மேலும், “தற்சார்புடனும், தனித்துவ மான அடையாளங்களுடனும் ஒவ்வொரு  மாநிலமும் செழித்து வளரும்போதுதான் ஒன்றுபட்ட வலிமையான இந்தியத் திரு நாடு உலக அரங்கில் உயர்ந்து நிற்கும்! அதற்கு தமிழ்நாடு எப்போதும் துணை நிற்கும்” என்று உறுதியளித்தார். “வாழ்க தமிழ்! வெல்க தமிழ்நாடு! வளர்க இந்தியா!” என்ற வாழ்த்துடன் தனது உரையை நிறைவு செய்தார்.