ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மின்வாரி யத்தை தனியார்மயப்படுத்துகின்ற நடவடிக்கையை அரசு நிர்வாகம் எடுத்து வருகின்றது. ஜம்மு-காஷ்மீர் பவர் டிரான்ஸ் மிஷன் கார்ப்பரேசன் லிமிடெட் மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா இரண்டும் இணைந்து கூட்டு நிறு வனமாக உருவாக்குவதன் மூலம் மின்துறையின் வளர்ச்சி ஆரம்ப நாட்களில் இருந்தது. ஜம்மு-காஷ்மீர் மின்சார ஊழியர்கள், பொறியாளர்கள் அனை வரும் மின் அபிவிருத்தி துறையின் கீழ் செயல்பட்டு வந்தனர். இவர்கள் அனைவரும் அரசு ஊழியர்களாக உள்ளனர். இவர்களைத் தவிர ஆயி ரக்கணக்கானோர் ஒப்பந்த ஊழியர் களாகவும் பணியாற்றி வந்தனர். ஒன் றிய அரசு இவர்களை நிரந்தரப்படுத்த வாக்குறுதியும் அளித்திருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேச மாக பிரிக்கப்பட்டது. ஊழியர்களுக் கான உறுதிமொழியை நிறைவேற்ற வில்லை. சம்பளத்தை காலம் தாழ்த்தி வழங்கி வந்தது. அனைத்து அரசு ஊழியர்களும் (ஒப்பந்தம் மற்றும் நிரந்தரம்) பவர் கார்ப்பரேசனுக்கு பணி நிலையில் மாற்றம் செய்யாமல் தற்கா லிக பணி இடம்மாற்றம் செய்யப்பட்ட னர். இந்நிலையில் ஒன்றிய அரசின் மின்சாரத்துறை 33 கிலோவாட் நெட் ஒர்க்கை நாடு முழுவதும் பவர் கிரிட் கார்ப்பரேசனின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு தேசிய பண மாக்கல் திட்டத்தின்கீழ் முயற்சி செய்தது. ஆனால் ஜம்மு-காஷ்மீர் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் ஒன்றிய அரசின் இந்த மோசடி திட்டத்தை உணர்ந்து டிசம்பர் 17 நள்ளிரவு முதல் காலவரை யற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கி னார்கள்.
போராட்டத்தில் இறங்கிய ஜம்மு-காஷ்மீரில் மின்வாரிய ஊழியர்கள் மீது தாக்குதல் தொடுக்க ஒன்றிய அரசு தயாரானது.அனைத்து தொழிற் சங்க தலைவர்களின் வீடுகளிலும் போலீஸ் சோதனை நடத்தப்பட்டது. அனைத்து தொழில்நுட்ப பணிகளிலும் இராணுவத்தை ஈடுபடுத்தினார்கள். ஆனால் ராணுவத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 95சதவீதம் துணை மின் நிலையங்களும், மின்பாதைகளும் பாதிப்புக்குள்ளாகி மின்சாரம் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் தேசிய மின்சார தொழிலாளர் மற்றும் பொறி யாளர் கூட்டமைப்பு இந்திய நாடு முழுவதும், ஜம்மு-காஷ்மீர் மாநில மின்சார ஊழியர்களுக்கு ஆதரவு குரல் எழுப்பவும் கண்டன முழுக்கங் களை பதிவு செய்யவும் கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடததினார்கள். இந்நிலையில் காஷ்மீரில் 20ந்தேதி நள்ளிரவு தொழிற்சங்க தலைவர்களை அழைத்து ஒப்பந்தம் காணப்பட்டது. போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிர தேச மின்வாரியத்தில் பணியாற்றும் மின்ஊழியர்கள் மற்றும் பொறி யாளர்கள் இணைந்து போராடி அரசைப் பணிய வைத்திருப்பது மின் ஊழியர்களின் போராட்ட வரலாற்றில் ஒரு மைல் கல் 72 மணி நேரத்தில் இந்த சாதனையை மின் ஊழியர்கள் படைத்துள்ளனர்.
இராணுவமே வந்தாலும் ஊழி யர்களும், பொறியாளர்களும் இணைந்து என்ன விலை கொடுத்தே னும் உரிமையை காப்போம் என்று செயலாற்றிய ஜம்மு-காஷ்மீர் மின்வா ரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர் களுக்கு தமிழக மின்வாரிய ஊழியர் களின் புரட்சிகர வாழ்த்துக்களை தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) தெரிவித்துக் கொள்கிறது. தமிழகத்தில் இதேபோன்று துணை மின்நிலையங்களை தனியாருக்கு 3 ஆண்டுகளுக்கு பராமரிக்க கொடுக்க முற்பட்ட பொழுது 2020 டிசம்பர் 21ல் மின்வாரிய ஊழியர்கள், பொறியா ளர்கள் இணைந்து போராடி அந்த உத்த ரவை திரும்பப்பெற்றனர். தற்போது தமிழகத்தில் துணை மின் நிலையங் களையும், கணக்கீடு உற்பத்தி மற்றும் விநியோகப் பிரிவுகளில் அவுட்சோர் சிங் விடுவதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளிவரு கின்றன. தமிழக அரசு போராட்டத்தை தூண்டாது என நம்புகிறோம். அரசும், மின்வாரியமும் தங்களது எண்ணங்களை மாற்றிக்கொள்ளா விட்டால் போராடுவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.