tamilnadu

img

வெறுப்பு அரசியலின் கோரமுகம்!

76 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடியதற்காக 17 முஸ்லிம்கள் மத்தியப் பிரதேச பா.ஜ.க. அரசாங்கத்தால் தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஆர்எஸ்எஸ் -பாஜக ஆதரவு ஊடகங்கள் இவர்களை பெரிய தேசத்துரோகிகள் போல சித்தரித்தனர். ஊடகங்களே விசாரணை நடத்தி அவர்களுக்கு மரண தண்டனை தேவை என கூக்குரலிட்டன. 17 பேரில் ஒருவர் மன உளைச்சல் தாங்காமல் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். 76 மாதங்களுக்கு பின்னர் இவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இவர்களுக்கு எதிராக பொய் சாட்சியம் சொன்னவர்கள், தாங்கள் அவ்வாறு பொய் சாட்சியமளிக்க நிர்பந்தப்படுத்தப்பட்டோம் என கூறியுள்ளனர்.  இறந்த உயிரை யார் மீட்டுத்தருவார்? இவர்களின் 76 மாத வாழ்க்கையை யார் திரும்பத் தர முடியும்? வெறுப்பு அரசியலின் கோர வடிவத்தின் ஒரு வெளிப்பாடுதான் இது! வெறுப்பு அரசியல் பரவியது பா.ஜ.க.வின் ஆட்சியில்! சங் பரிவாரத்தின் வெறுப்பு அர சியல் ஏற்படுத்தும் கோர விளைவுகளை கண்டும் காணாமல் இருப்பது பிரதமர் மோடியின் ஆட்சி! வெறுப்பு அரசியலை அகற்ற பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து அகற்றுவோம். - அன்வர்