பாலஸ்தீனத்தில் கொரோனா பெருந்தொற்றை எதிர் கொள்ள உதவும் வகையில், 5 லட்சம் தடுப்பூசி களை சீனாவும், எகிப்தும் வழங்கியுள்ளன. இந்தத் தடுப்பூசி கள் சீன மற்றும் எகிப்து மருந்து நிறுவனங்களால் கூட்டாக தயாரிக்கப்பட்டவையாகும். பெருந்தொற்று துவங்கியதிலி ருந்து 3 கோடி தடுப்பூசிகளை எகிப்து உருவாக்கியுள்ளது. பெருந்தொற்றை மட்டுமல்ல, பொதுவாக சுகாதாரப் பிரச்ச னைகளை பாலஸ்தீனம் எதிர்கொள்ள உதவும் வகையில் தங்கள் உதவி இருக்கும் என்று சீனாவும், எகிப்தும் அறி வித்துள்ளன.
பொலிவியாவுக்கு ஆயுதங்களைக் கடத்தியது தொடர்பான விசாரணை அர்ஜெண்டினாவில் சூடு பிடித்துள்ளது. பொலிவியாவில் இடதுசாரி அரசைக் கவிழ்ப்பதற்காக அப்போதைய அர்ஜெண்டினா வலதுசாரி அரசின் ஆதரவுடன் ஆயுதங்கள் கடத்தப்பட்டன. தற்போது அர்ஜெண்டினாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்திருப்பதால் ஆயுதக்கடத்தில் குறித்த விசாரணை துவங்கியது. ராணுவத்தில் பணியாற்றும் 21 அதிகாரிகள் இந்த ஆயுதக்கடத்தல் குறித்த தகவல்களை நீதிபதியிடம் தரவிருக்கிறார்கள்.
ரஷ்ய எல்லைக்குள் புகுந்த உக்ரைன் பீரங்கி எதிர்த்தாக்குதலில் அழிக்கப்பட்டது என்று ரஷ்யா அறி வித்திருக்கிறது. உக்ரைனின் டோனெக்ஸ் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகள் தங்களைக் குடியரசுப் பகுதிகளாக அறிவித்துக் கொண்டுள்ளன. அந்தப் பகுதிகளுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில் உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள் புகுந்ததால், ரஷ்யா எதிர்த்தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை உக்ரைன் மறுத்துள்ளது.