tamilnadu

17 ஆண்டுகளை கடந்தும் அழியாத சுவடுகளை விட்டுச்சென்ற சுனாமி

சென்னை,டிச.25-    சுனாமி ஆழிப்பேரலை தாக்கி லட்சக் கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய சோக தினத்தின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி தமிழகத்தின் கடற்கரையை பதம் பார்த்து பிணக்காடாக்கிய சுனாமி பேரலை நாகை மாவட்டத்தில் பேரழிவை ஏற்படுத்தியது. உயிரிழப்புக்கள் தவிர்த்து ஏற்பட்ட சேதத்தின் மொத்த மதிப்பு ரூ.733 கோடி என்று அப்போது  கணக்கிடப்பட்டது. அலையில் சிக்கி உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை மட்டுமே 6,065. இதில் ஆசை ஆசையாய் வளர்த்த பெற்றோரை இழந்து ஆதரவின்றி நிர்கதியாய் திக்கற்று நின்ற குழந்தைகள் மட்டுமே 243 பேர். தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரை  மட்டும் இழந்தவர்கள் 1329 பேர். இறந்து போன 6,065 பேரில் கிறிஸ்துமஸ் தினத்துக்காக  வேளாங்கண்ணிக்கு வந்திருந்த வெளி மாவட்டங் களைச் சேர்ந்த 536 பேர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 240 பேரும் இதில் பலியானார்கள்.

நாகை மாவட்டம் இத்தனை பெரிய ஈடுகட்ட முடியாத பாதிப்பைச் சந்தித்திருந்தாலும் உலக  வங்கி, மத்திய அரசு, தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மாநில அரசு என்று  அனைத்து தரப்பினரின் ஆதரவால் நாகை முழு மையாக மீண்டு வந்து விட்டது. இதேபோல், கடலூர் மாவட்டமும் அதிக சேதத்தை சந்தித்தது. சுனாமிக்குப் பிறகு கட லுக்குப் போகும் மீனவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதி கரித்துள்ளது. வாழ்க்கைத்தரமும் உயர்ந்து ள்ளது என்பதுதான் தற்போதைய நிலவரம். பொதுவாக சொல்லப்போனால் சுனாமியால் ஏற்பட்ட பொருட்சேதம் ஈடு செய்யப்பட்டு விட்டது.  

மாண்டவர்களின் நினைவுகள் தான் உறவினர்களின் நெஞ்சத்தை விட்டு இன்னமும்  அகலவில்லை. சீர்காழி அடுத்த திருமுல்லை வாசல் மீனவர் கிராமத்தில் மட்டும் ஆழிப்பேரலை யில் சுமார் 89 மீனவர்கள் பலியாகினர். சுனாமி ஆழிப்பேரலை தாக்கி லட்சக் கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய சோக தினத்தின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவ கிராம மக்கள் தரங்கம்பாடி கடற்கரையில் இருந்து மௌன ஊர்வலம் சென்று சந்திரபாடி, பூம்புகார், சின்னமேடு, திருமுல்லைவாசல், தொடுவாய், வானகிரி, புதுப்பட்டினம் உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு ஸ்தூபியில் இன்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.