தெற்கு ரயில்வே பொது மேலாளரின் கடிதத்தால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை
தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன!
மதுரை, மே 31 - தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப் பட்டுள்ள உண்மை, தெற்கு ரயில்வே பொது மேலாளரின் கடிதத்தால் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது: தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் ‘பிங்க் புத்தகத்தை’ சென்ற ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின்தான் வெளியிட்டார்கள். இந்த ஆண்டு பிங்க் புத்தகத்தையே ஒழித்து விட்டு, ‘தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரங்கள்’ என்று நீண்ட நாள் கழித்து வெளியிட்டார்கள். தமிழக ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் கோடி ரூபாய் தான் ஒதுக்கி உள்ளார்கள் என்பது குறித்து நான் விமர்சித்த பின்பும், எவ்வளவு ஒதுக்கீடு என்பதை மறைத்தார்கள். சில திட்டங்களை சர்வே திட்டத்திற்கு ஏன் மாற்றியுள்ளார்கள் என்று நான் கேள்வி எழுப்பியிருந்தேன். விமர்சனம் உண்மையாகிவிட்டது இப்போது தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ரயில்வே வாரியத்துக்கு எழுதிய (மே 14 தேதி) கடிதத்தில் முழு உண்மையும் வெளிவந்து விட்டது. இந்த திட்டங்களை அமல்படுத்தாமல் முடக்கவே இந்த குளறுபடிகளை செய்கிறார்கள் என்று நான் விமர்சித்தது உண்மையாகிவிட்டது. தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் எழுதி யுள்ள கடிதத்தில், “ரயில்வே வாரியம் 26.9.2019 கடிதம் மூலம் தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை முடக்கியதாகவும் (freeze), அந்த திட்டங்களுக்கு இப்போது ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அந்த நிதியை திரும்பவும் சரண்டர் செய்வதாகவும்” தெற்கு ரயில்வே கூறி உள்ளது. மேலும் முடக்க திட்டம் திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை; அத்திப்பட்டு - புத்தூர் ஆகிய இரு புதிய பாதை திட்டங்களும் ஏற்கனவே முடக்கப்பட்டதாகவும், அதனை விடுவித்தால்தான் (டிஃப்ரீஸ்) பணம் செலவு செய்ய முடியும் என்றும், எனவே இரு திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தலா ரூ.42.70 கோடியை சரண்டர் செய்கிறோம் என்றும் எழுதி யுள்ளார். வேறு சில திட்டங்களை முடக்க பட்டிய லில் இருந்து விடுவிக்கவும் கோரியுள்ளார். ஈரோடு - பழனி புதிய பாதை திட்டத்தை செயல் படுத்த முடியாது என்றும், அதனை கைவிட வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே கடிதம் எழுதி யுள்ளது. இதற்காக ஒதுக்கிய 52.135 கோடியை சரண்டர் செய்துள்ளார்கள். மதுரை - அருப்புக் கோட்டை வழியாக தூத்துக்குடி புதிய பாதை திட்டத்தை ஏற்கனவே முடக்க கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. அதற்கான ஒதுக்கீடு ரூ.55.1667 கோடியை சரண்டர் செய்வதாகவும் கூறியுள்ளார் கள். இராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்தை சுற்றுச்சூழல் காரணமாக கைவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரி உள்ளது. அதனால் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடி யாததால், அதற்கான ஒதுக்கீடு ரூ.5.1239 கோடியை சரண்டர் செய்கிறோம் என்றும் கூறியுள்ளார்கள். பிங்க் புத்தகம் தவிர்ப்பு அதைப்போல மூன்று இரட்டை பாதை திட்டங் களான காட்பாடி - விழுப்புரம்; சேலம் - கரூர் - திண்டுக்கல்; ஈரோடு - கரூர் ஆகியவை இன்னமும் திட்ட தயாரிப்பு கட்டத்தில்தான் உள்ளன. எனவே இவற்றுக்கான ஒதுக்கீடு முறையே ரூ.200 கோடி, 100 கோடி, 100 கோடி ஆகியவற்றை செலவு செய்ய முடியாது என்றும் அதனை சரண்டர் செய்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த திட்டங்கள் மூன்றும் சர்வேக்கு மாற்றப் பட்டுள்ளது ஏன் என்று நான் கேட்ட கேள்விக் கான பதில், இப்போது வெட்ட வெளிச்சமாகி யுள்ளது. எனவே தமிழகத்தின் முக்கிய புதிய பாதை மற்றும் இரட்டை பாதை திட்டங்களை ஒன்றிய அரசு முடக்கியதை மறைக்கவே பிங்க் புத்தகம் வெளியிடுவதை தவிர்த்தார்கள். தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளதை மறைக்க, ரயில்வே அமைச்சகம் தமிழக அரசு நிலம் கையகப்படுத்த வில்லை என்று பொய்யான குற்றச்சாட்டு சொன்னதை நாம் பார்த்தோம். தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை முடக்கியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். முடக்கப்பட்ட திட்டங் களை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.