tamilnadu

img

“கொலம்பஸ்... கொலம்பஸ்... விட்டாச்சு லீவு” - கணேஷ்

“டேய்.. அங்க பாருங்கடா.. நம்ம சார்.”
குரல் கேட்டுத் திரும்பினார் ஆசிரியர்.
“அடடே... என்ன எல்லாரும் ஒண்ணா நிக்குறீங்க?”
“சார்.. கிரிக்கெட் விளையாடிட்டு வர்றோம்.”
“எப்பப் பாத்தாலும் படிச்சுட்டே இருக்குற மாதிரி இருக்குல்ல சார்.”
“டேய்.. டேய்.” என்று மற்றவர்கள் கிண்டலடித்தார்கள்.
ஒரு மாணவரின் மொபைலில் அழைப்பு. “கொலம்பஸ்.. கொலம்பஸ்... விட்டாச்சு லீவு” என்ற ரிங்டோன்.
பேசி வைத்தவுடன், “கொலம்பசுக்கும், லீவுக்கும் என்ன சம்பந்தம்.”
“இதக் கண்டுபிடிக்குறதுக்குள்ள கொலம்பஸ் மாதிரி புதுசா எதையாவது கண்டுபிடிச்சுறலாம்”
“அவர் எதக் கண்டுபிடிச்சாரு?”
“ஓ.. டெஸ்ட் பண்றீங்களா சார்... அமெரிக்காவத்தான்.”
“அவரு கண்டுபிடிச்சது அமெரிக்கா இல்ல..  அவரு பேரு அமெரிக்கன் வெஸ்புகி. கிழக்காசிய நாடுகள நோக்கித்தான் பலரும் கிளம்புனாங்க... கொலம்பசும் அதுல ஒருத்தர்... அவரோட கப்பல் ஒரு தீவுல போய்த்தட்டி நின்னுச்சு... மக்களப் பாத்த கொலம்பஸ் இந்தியாவுக்கு வந்துட்டதா நெனச்சுட்டாரு.. இப்போ மேற்கு இந்தியத் தீவுகள் சொல்ற தீவுக்கூட்டங்கள்ல ஒண்ணுதான் அது.?
“ஆமாம்ல்ல... படிச்சது ஞாபகத்துக்கு வருது.”
“முதல்ல அவர் இறங்குறப்ப தீவுல இருந்த மக்கள் பயந்து ஓடுனாங்க.. இவரு கொஞ்சம் கொஞ்சமா அவங்களோட நண்பரானாரு.  ரெண்டு, மூணு தடவ போனாரு.. நண்பர்களக் கூட்டிட்டு போனாரு.. அப்புறமா நண்பர்கள் அவங்களாவே கப்பல்ல போனாங்க. சேட்டைய ஆரம்பிச்சாங். அந்த மக்களத் தொந்தரவு பண்ணுனாங்க.. மக்கள் விரட்டி அடிச்சாங்க்.. நண்பர்கள் போய் கொலம்பஸ்கிட்ட புலம்புனாங்க.”
“நண்பர்கள அவர் திட்டுனாரா சார்”
“இல்ல. நண்பர்களுக்காக மறுப்டியும் போறதுன்னு முடிவு பண்ணுனாரு.. அவரோட கப்பலப் பாத்ததும் தீவு மக்கள் விரட்டுறதுக்காக வந்தாங்க.. ஆனா ஒரு படகுல கரையை நோக்கி கொலம்பஸ் வர்றதப் பாத்ததும் அவங்க சும்மா இருந்தாங்க.”
“நண்பர்களயும் உள்ள விட்டாங்களா சார்.”
“தனியாத்தான் கொலம்பஸ் வந்தாரு.. வந்த சில நிமிஷங்கள்லயே அவர்கிட்ட உரக்கப் பேச ஆரம்பிச்சாங்க.. கொஞ்ச நேரம் அதையெல்லாம் கேட்ட கொலம்பஸ், என்னோட நண்பர்கள நீங்க விரட்டுனதுனால கடவுள் கோபிச்சுக்கிட்டாரு. இன்னிக்கு உங்ககிட்ட இருந்து சூரியனப் பறிச்சிடுவாரு.”
“சூரியனப் பறிச்சுட்டா, எங்களுக்கு வெளிச்சம்? - அரற்றினார்கள் சிலர்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே, சூரியன் காணாமல் போனது. பகலில் இப்படி இருட்டும் என்று மக்கள் எதிர்பார்க்கவில்லை. சூரியன் வராவிட்டால், இனித்தங்கள் வாழ்க்கையில் வெளிச்சமே இருக்காதோ என்ற அச்சம் சூழ்ந்தது.
“நாங்க என்ன செய்யணும்”
“என்ன பண்றதுனு எனக்குத் தெரியல. நான் வேணும்னா கடவுள்கிட்ட பேசிப் பாக்குறேன். ஆனா இனிமே நண்பர்கள் வர்றப்ப அவங்கள எதுவும் பண்ணக்கூடாது. இதுக்கு ஒத்துக்கிட்டா பேசிப் பாக்குறேன்.”
அனைவரும் ஒரே குரலில் “சரி” என்றார்கள்.
கப்பலுக்கு திரும்பிய கொலம்பஸ், 30 நிமிடங்களுக்குப் பிறகு தீவுக்குத் திரும்பினார். “கடவுள்கிட்ட பேசிட்டேன். இன்னும் 15 நிமிஷத்துல உங்களுக்கு சூரியன் திரும்ப வந்துரும்.”
பேசப் பேச கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் வந்தது. சூரியனும் முழுதாகத் தெரிந்தது.
ஒட்டுமொத்த தீவு மக்களும் “ஹோ” என்று இரைந்தனர்.
“அப்படித்தான் அந்தப் பழங்குடி மக்கள் அடிமையானார்கள். கிட்டத்தட்ட அழிந்தே போய்விட்டது அந்த இனங்கள். அன்னிக்கு கிரகணம்னு கொலம்பசுக்குத் தெரியும். கப்பலுக்குப் போயி, சும்மா கண்ணாடி முன்னாடி அவரு உக்காந்திருந்தாராம். பழங்குடி மக்கள ஏமாத்திருக்காரு.”
“அப்போ கறுப்பா இருக்குறாங்களே, அவங்க பழங்குடி இல்லையா”
“இல்ல.. வேலை செய்யுறதுக்காக பின்னாடி ஆப்பிரிக்காவுல இருந்து ஐரோப்பியர்கள் கூட்டிட்டுப் போனாங்க. ஆப்பிரிக்காவையும் முழுமையா வாஸ்கோட காமாதான் ஐரோப்பியர்களுக்கு அறிமுகப்படுத்துனாரு.”
“கடல் வழியா இந்தியாவுக்கு வந்தாரே, அவரா சார்.”
“ஆமா.. கென்யாவுலருந்து அவர் வந்த கப்பல் 23 நாள்ல கோழிக்கோடுக்கு வந்துருச்சு... கப்பாடு கடற்கரைல இறங்குனாரு.”
“மே 20, 1498ல வந்தாரு.. சரியா சார்.”
“சரியாச் சொன்ன.. வீட்ல சொல்லிட்டுதான வந்தீங்க.”
“சரியா 1 மணிக்கு வந்துருவோம்னு சொல்லிருக்கோம்.”