tamilnadu

மார்ச் 5 இல் தமிழக அமைச்சரவை கூடுகிறது!

சென்னை,மார்ச்2- தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த  ஜனவரி மாதம் 5 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதில் 15 சட்ட மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டது. அதன் பிறகு சட்டப் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. இதன் பிறகு கடந்த மாதம்  8 ஆம் தேதி சிறப்பு கூட்டம் கூட்டப்பட் டது. இதில் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு  அளிக்க கோரும் மசோதா மீண்டும் நிறை வேற்றப்பட்டு கவர்னர் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் ‘பட்ஜெட்’ தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் துறை வாரியாக ஆலோ சனை நடத்தி வருகிறார். வர்த்தக அமைப்பி னர், வணிகர் சங்கத்தினர் ஆகியோருடனும் கருத்துக்கள் கேட்டறிந்துள்ளார். தற்போது பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன. அநேகமாக வருகிற 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 19 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவை கூடி அதில்  இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள்  குறித்து விவாதித்து ஒப்புதல் அளிக்கும். இதற்காக மார்ச் 5 ஆம் தேதி தமிழக அமைச்ச ரவை கூடுகிறது.