சென்னை, ஆக.9- தமிழ்நாடு மாணவர்களுக்கு சின்னதாக ஒரு உதவி, ஊக்கமும் கொடுத்தால் போதும், அடித்து தூள் கிளப்பி விடுவார்கள். இதுபோன்ற தூண்டுதல்கள் தான், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண், அனைவருக்கும் ஐஐடி போன்ற திட்டங்கள் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல் வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், “அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளி கள், அரசுக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளின் நிர்வாக அமைப்பில் வேறுபாடு கொண்டதாக இருக்கலாம். ஆனால், தரத்தில் எல்லா கல்வி நிறுவனங்களும் ஒரே அளவுகோலில் தான் இயங்க வேண்டும்”என்றார். நாட்டின் முதன்மை கல்வி நிறுவ னங்களில், இதுவரை தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள், மிகக் குறைவான அளவில் தான் உயர் கல்விக்காக சென்றுள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். அனைவருக்கும் அனைத் தும் கிடைக்க வேண்டும். கல்வியிலும் இதுதான் அரசின் நிலைப்பாடு என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நாட்டின் உயர் கல்வி நிறுவனங்கள் எவை? அங்கு நுழைய எப்படி விண் ணப்பிப்பது?, போட்டித் தேர்வுகளுக்கு படிக்கக்கூடிய முறை என்ன? இப்படி யான பல தகவல்கள் சென்று சேராமல் இருந்தது. இப்போது அந்தப் பாதையை உருவாக்கி இருக்கிறோம். ஆனால், இந்த ஆண்டு 225 மாணவர் கள் நாட்டின் முதன்மை கல்வி நிறுவ னங்களுக்கு செல்லப் போகிறார்கள். பள்ளிக் கல்வித்துறையின் கடுமை யான முயற்சியால்தான் இது சாத்திய மானது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.