கே.வரதராசன் நகர் (திருச்சூர்), டிச.13- இந்திய நாடு இதுவரை கண்டிராத வகையில் நடந்த மாபெரும் போராட்ட ங்களின் வீரியத்துடன் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35ஆவது அகில இந்திய மாநாடு திருச்சூரில் செவ்வாயன்று (டிச.13)தொடங்கியது. தோழர் கே. வரதராசன் நகரில் (புழக்கால் லூலூ இன்டர்நேசனல் வளாகம்) சங்கத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் எழுச்சி முழக்கங்களுக்கிடையே கொடியேற்றினார். அப்போது முழங்கிய அதிர் வேட்டுகள் வானில் ஏந்திச் சென்ற சிவந்த குடைகள் விரிந்து செங்கொடிகளைப் பறக்கவிட்டன. சிவப்பு வண்ண பலூன்களும் பறக்க விடப்பட்டன. உலக உருண்டையை உயர்த்திப்பிடிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டிருந்த தியாகிகள் ஸ்தூபிக்கு தலைவர்களும் மாநாட்டு பிரதிநிதிகளும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடந்த பொது மாநாட்டுக்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் அசோக் தாவ்லே தலைமை வகித்தார். அமைச்சரும் வரவேற்புக்குழு தலை வருமான கே.ராதாகிருஷ்ணன் வர வேற்றார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஏ.விஜயராகவன் வாழ்த்துரை வழங்கி னார். பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா அறிக்கை சமர்ப்பித்தார். வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்பட 803 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
பொதுச்செயலாளர் அறிக்கை மீது பிற்பகல் விவாதம் தொடங்கியது. டிசம்பர் 15 வரை 3 நாட்கள் பிரதிநிதிகள் விவாதம் நடைபெற உள் ளது. நிர்வாகிகள் தேர்வு டிசம்பர் 16 காலையில் நடைபெறும். மாலையில் நடக்கும் பொதுக்கூட்டத் தை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். முன்னதாக போராட்ட பூமிகளான தெலுங்கானாவில் இருந்தும், கீழ்வெண்மணியில் இருந்தும் அகில இந்திய இணைச் செயலாளர் டாக்டர் விஜுகிருஷ்ணன், பொருளாளர் பி. கிருஷ்ணபிரசாத் ஆகியோர் தலைமை யில் கொண்டு வரப்பட்ட தியாகச் சுடர்கள், மாநிலத் தலைவர் எம்.விஜய குமார் தலைமையில் புன்னப்புரா-வய லாரில் இருந்து கொண்டு வரப்பட்ட மாநாட்டுக்கொடி, கையூரிலிருந்து மாநிலச் செயலர் வத்சன் பனோளி தலைமையில் கொண்டுவரப்பட்ட கொடிமரம் பெறும் நிகழ்ச்சி திங்க ளன்று மாலை நடைபெற்றது.